For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் ஒரு 26 வயது விதவை. என் வலி யாருக்கும் புரிவதில்லை - My Story #211

நான் ஒரு 26 வயது விதவை. என் வலி யாருக்கும் புரிவதில்லை - My Story #211

By Staff
|

சிறு வயதில் இருந்தே நான் விரும்பியது எல்லாம் எனக்கு கிடைத்தது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, யாரேனும் என்னிடம் "உன் வாழ்வில் நடந்த கஷ்டத்தை பற்றி கூறு?" என கேள்விக் கேட்டிருந்தால் என்னிடம் பதில் ஏதும் இருந்திருக்காது. காரணம், நான் என் வாழ்வில் கஷ்டம் என பெரிதாக எதையும் அனுபவித்து கிடையாது.

பெரிய கஷ்டம் என்றால், எனக்கு ஸ்மார்ட் போன் வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்த அந்த இரண்டு நாட்களை கூறலாம். மற்றபடி நான் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட மகள்.

அம்மா கூறுவாள், "இப்போ உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாது, கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போ... அப்பதான் தெரியும்டி உனக்குன்னு... " அப்படி அம்மா கூறும்போதெல்லாம் அப்பா சண்டைக்கு வருவார், "பெத்த மகளுக்கே சாபம் கொடுக்கிறியா" என்று. ஒருவகையில் அம்மா சொன்னது உண்மையும் கூட.

ஆனால், அப்படி கூறியதற்கு அம்மா இப்போது வருந்துகிறார். தவறு அவர் மீதில்லை. என் தலைவிதி... வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Im 26 Year Old Widow. And No One Understands My Unbearable Pain!

Im 26 Year Old Widow. And No One Understands My Unbearable Pain!
Desktop Bottom Promotion