Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
Dhania Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி தான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தனியா என்று அழைக்கப்படும் மல்லி விதை உள்ளதா? அப்படியானால் அதை வைத்து மல்லி விதை சட்னி செய்யுங்கள். இந்த சட்னி நீங்கள் இதுவரை சாப்பிடாத சுவையில் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி சட்னியை செய்து விட்டால், அதற்குப்பிறகு அடிக்கடி இந்த சட்னியைத்தான் செய்வீர்கள். இந்த சட்னி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மல்லி விதை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி விதை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- ¼ கப் தனியா
- 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
- ½ இன்ச் இஞ்சி
- 5 பூண்டு பல்
- 10 கறிவேப்பிலைகள்
- நெல்லிக்காய் அளவு புளி
- 2 வர மிளகாய்
- ¼ கப் துருவிய தேங்காய்
- ½ ஸ்பூன் வெல்லம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- இஞ்சியை நன்றாக கழுவித் தோலுரிக்கவும். அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, தனியா, நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- கடைசியாக, துருவிய தேங்காயைச் சேர்க்கவும். சில நிமிடங்களுக்குக் கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கவும்.
- அனைத்து பொருட்களையும் ஆற விடவும். இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர் உப்பு, புளி மற்றும் வெல்லத்தைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அனைத்தையும் கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இது ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் இதை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான மல்லி விதை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications