திருமணமானவர்கள் சொன்ன இரகசியம்! நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

திருமணமானவர்களின் இரகசியங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi

திருமணமான புதிதில் பெண்கள் எப்படி நடந்த நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், யார்யாரிடம் கவனமாக இருக்க வேண்டும். அதிகரிக்க வேண்டியது என்ன குறைக்க வேண்டியது என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இதனை எல்லாம் நாமாக தெரிந்து கொள்ளவதை விட பிறர் சொல்லி தெரிந்து கொள்வது என்பது சிறந்தது. திருமணத்திற்கு பின்னரான இரகசியங்களை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிசுகிசு

கிசுகிசு

நீங்கள் எதையும், யாரையும் நம்புவதற்கு சற்று காலமும் நேரமும் எடுத்துக்கொள்ள வேண்டும். எனது மாமியார், அவரது மூத்த மருமகளால் தான் அனுபவித்த கொடுமைகள், பிரச்சனைகள் பற்றி என்னிடம் மிகவும் மன வருத்தத்துடன் அடிக்கடி கூறுவார். நானும் இதையெல்லாம் கேட்டு, அவரை நாமாவது மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் என்று அவரை மகிழ்ச்சியாக பார்த்து கொண்டே. ஒரு வருடத்திற்கு பிறகு தான் தெரிந்தது.. அவர் என்னையும் பற்றி பிறரிடம் குறை சொல்லி இருக்கிறார் என்பது...!

குடும்ப அரசியல்

குடும்ப அரசியல்

குடும்ப அரசியல்கள் திருமண உறவை முறிக்க கூடும். திருமண உறவை முறிப்பதற்காக கிளம்பும், உறவுகளின் பட்டியலுக்கு ஒரு முடிவே கிடையாது. நான் எனது கணவரின் அத்தைக்கு அவரது சோதனை காலங்களில் எல்லாம் பல உதவிகளை செய்து இருக்கிறேன். ஆனால் அவர் பல சமயங்களில் எனக்கு மோசமான அரசியலை காட்டிவிட்டார்.

உதவா கணவர்

உதவா கணவர்

நான் பலமுறை எனது மாமனார், மாமியார் பிரச்சனையால் வருத்தப்பட்டுள்ளேன். ஆனால் எனது கணவர் இதை இல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். பல கணவர்கள் இப்படி தான் இருக்கிறார்கள். இது மிகவும் கொடுமையான ஒன்று..

எனக்கான நேரம்

எனக்கான நேரம்

உங்களுக்கு இது சற்று வேண்டாத விஷயமாக தோன்றலாம். ஆனால், திருமணத்திற்கு பின்னர் உங்களுக்கென ஒரு சில தனிமையான நிமிடங்களை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக டிவியில் நமக்கு பிடித்த விஷயத்தை பார்க்க முடியாத பொழுதுகளில் தான்.

சம்பளம்!

சம்பளம்!

எனது கணவரின் குடும்பத்தினர் யார்யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதில் முழு கவனம் செலுத்துவார்கள். எனக்கு என் கணவன் இருக்கும் நகரத்திலேயே வேலை கிடைத்துவிட்டது என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இதனை நானும் என் கணவரது இருவரின் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள விரும்பினோம். எனது அப்பா, நீ பத்திரமாக இரு.. புது இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி பேசினார். ஆனால் எனது கணவரது வீட்டில் முதலில் சம்பளம் எவ்வளவு என தான் கேட்டார்கள்!

இரகசியம் இன்மை!

இரகசியம் இன்மை!

கணவன், மனைவி இடையில் எந்த ஒரு இரகசியமும் இல்லாமல் இருப்பது என்பது நினைக்க, ரொமேண்டிக்காக தான் இருக்கும். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் இவ்வாறு இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, October 10, 2017, 15:40 [IST]
Desktop Bottom Promotion