Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
உங்க பொண்டாட்டி கிட்ட நீங்க இந்த ஒரு கேள்விய மட்டும் எப்பவும் கேட்டுடாதிங்க!
கணவன் - மனைவி உறவில் எல்லாவற்றையும் துளியும் ஒளிவுமறைவு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் தான். இந்த கேள்வியை முடிந்த வரை இந்த தலைமுறையில் தவிர்த்துவிடுவது நல்லது.
கணவன் - மனைவி ஒருவரை பற்றி ஒருவர் நன்கு முழுமையாக அறிந்துக் கொள்வது அவசியம் தான். ஆனால், அழவைக்கும் உண்மையை விட, சிரிக்க வைக்கும் பொய்யே மேலானது என்பது போல, நமது சந்தோசத்தை சீர்குலைக்கும் சில விஷயங்களை அறிந்துக் கொள்ளாமலே விட்டுவிடுவது நல்லது தான்.

கணவன், மனைவி ஒருவரிடம் ஒருவர் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும், அவரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும், அதற்கு ஏற்ப நடந்துக் கொள்ள வேண்டும். இல்லறம் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
அதே நேரத்தில் நீங்கள் கேட்கும் கேள்வியானது உங்கள் துணையை காயப்படுத்தாமல், உங்கள் வாழ்க்கையை நோகடிக்காமல் இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

என்ன கேள்வி?
"உனக்கு முன்னாடி ஏதாவது காதல் அனுபவம் இருக்கா? இல்ல அதுக்கும் மேல ஏதாவது?"
இந்த காலத்தில் அனைத்து ஆண்களும் தங்கள் மனைவி உத்தம பத்தினியாக இருக்க வேண்டும் என்று தான் வேண்டுகிறார்கள். ஆனால், எத்தனை ஆண்கள் உத்தமனாக, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பாராமல், ஃபேஸ்புக்கில் கூட மொக்கை போடாமல் இருக்கிறார்கள்.

ஆண்களின் மனோபாவம்!
ஆண்களின் செயல்கள் மட்டுமல்ல, ஆண்களின் மனோபாவமும் பெண்களுக்கு எதிராக அதிக ஆதிக்கம் கொண்டது தான். தாங்கள் எத்தனை பெண்களிடம் வேண்டுமானாலும் நட்பு பாராட்டலாம்.
ஆனால், பெண்கள் அப்படி இருக்க கூடாது. சமூகம் தவறாக பேசும் என்பார்கள். அந்த சமூகமே ஆண்கள் தான் என்பதை மறைத்துவைத்துக் கொள்வார்கள்.

இந்த கேள்வி அவசியமா?
அப்படி மிகுந்த ஆர்வம் அல்லது சங்கடம், மனதை உறுத்துகிறது என நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் துணையும் வெளிப்படையாக "ஆம்..." என்றால் அதை முழு மனதாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு நீங்களே ஒரு கைதட்டலும், சபாஷும் கூறிக் கொள்ளுங்கள். ஏனெனில், 99% ஆண்களுக்கு அந்த பக்குவம் இல்லை.

மனசங்கடங்கள்!
பெரும்பாலான ஆண்கள், வம்படியாக இந்த கேள்வியை கேட்டுவிட்டு, பிறகு மிகுந்த மன சங்கடங்களுக்கு உள்ளாகின்றனர். சரியாக மனைவியிடம் பேச முடியாது, பழக முடியாது. எந்த ஒரு பெண்ணும், திருமணத்திற்கு முன்னால் வேறு ஆண் மீது ஆசைப்படமாலே, காதல் கொள்ளாமலோ இருக்க முடியாது. அதை வெளிப்படுத்தாமல் மறைத்து இருக்கலாமே தவிர, கண்டிப்பாக உடலில் ஹார்மோன் மாற்றம் உண்டாகியிருந்தால் 90% பேருக்கு இளமை வயது அரும்பு காதல் கண்டிப்பாக வந்திருக்கும். இதில் தவறேதும் இல்லை.

ஆணாக இருங்கள்!
திருமண வயதை எட்டிய நீங்கள் ஒரு முதிர்ச்சி அடைந்த ஆணாக இருக்க வேண்டும். சிறு பையன் போல கண்டதை யோசித்து மனதை குழப்பிக் கொள்ள கூடாது. காதல் என்பது இயற்கையான ஒன்று. உங்களுக்கு பதின் வயதில் ஏற்பட்ட அதே அனுபவம் ஒரு பெண்ணுக்கும் உண்டாவது தவறில்லையே.

அதுக்கும் மேல தப்பு!
இந்த தலைமுறையில் எல்லை தாண்டுவது மிக சாதரணமாகிவிட்டது. மெல்ல, மெல்ல கல்லூரி பயிலும் போதே அபாஷன் வரை செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தவறான செயல்பாடு. இதை தடுக்க அரசு சட்டங்களால் முடியாது, பெற்றோர் வளர்ப்பில், சமூக மாற்றத்தில் தான் இருக்கிறது.



Click it and Unblock the Notifications











