For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கணவன் அல்லது மனைவி எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்காங்களா? அப்படினா இதுதான் காரணமாம்!

அமெரிக்காவின் கவலை மற்றும் மனச்சோர்வு சங்கத்தின் கூற்றுப்படி, கவலைக் கோளாறுகள் மிகவும் பொதுவான மனநல நோயாகும். இங்குதான் நீங்கள் ஒரு மனநல ஆலோசக சிகிச்சையாளரை, ஒரு நிபுணரை அணுக வேண்டும்.

|

மக்கள் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகிறார்கள். எல்லா மனிதர்களும் இங்கு ஒரே மாதிரியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் இருக்கும். அவர்கள் ஒரு வித்தியாசமான முகத்தை வைத்திருக்கிறார்கள். அதை வார்த்தைகளில் அல்லது முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

Decoding people who cry a lot in tamil

சண்டைகள் மற்றும் வாதங்களின் போதும் அல்லது காரணமே இல்லாமல் பலர் அழலாம். இக்கட்டுரையில், எளிதில் அழுபவர்களை டிகோட் செய்து, அந்த முறிவுகளுக்கு என்ன காரணங்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நிரம்பிய உணர்ச்சிகள்

நிரம்பிய உணர்ச்சிகள்

உணர்ச்சி மிகுந்த மனிதர்கள் அடிக்கடி உடைந்து அழுதுவிடுவார்கள். ஏனெனில், அவர்களது மனதில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அவை நிறைவேறாத போது, ஒவ்வொரு முறையும் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்கள். இது அவர்களுடைய நடத்தையையே அழு மூஞ்சிகாரர்களாக மாற்றுகிறது. சில தனிநபர்கள் நிறைய விஷயங்களை பிடித்துக் கொண்டு, அதிகளவு எடுத்துக்கொள்வதால் அழுகிறார்கள். வெவ்வேறு விஷயங்கள் அந்தக் கண்ணீரைத் தூண்டுகின்றன. அவர்கள் அழுவதற்கு நீங்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

பச்சாதாபம்

பச்சாதாபம்

அழாத சிலர் திடீரென்று தண்ணீரைப் போல கண்ணீர் வடிக்க ஆரம்பித்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு மிகவும் உண்மையான காரணம் இருக்கலாம். அதிகம் அழுபவர்களுடன் அவர்கள் நெருக்கமாக இருக்கலாம்? ஆம் எனில், இது உணர்வுப்பூர்வமான பச்சாதாபம் தவிர வேறொன்றுமில்லை. மனிதர்களாகிய நாம் சிறிது நேரத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் பிரதிபலிக்க முனைகிறோம். குறிப்பாக உணர்ச்சிகள் வரும்போது, அதை கட்டுப்படுத்துவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய நினைவுகள்

தொடர்புடைய நினைவுகள்

நீங்கள் வேடிக்கையான அல்லது உணர்ச்சி மிகுந்த ஒரு திரைப்படத்தை பார்க்கிறீர்கள். திடீரென்று ஒருவர் அழத் தொடங்குகிறார். இந்த சூழ்நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட நபரின் நினைவை ஏதோ தூண்டியுள்ளதாக அர்த்தம். அது அவர்களை அழ வைக்கிறது. உங்கள் உணர்ச்சிகளை அந்த காட்சி கட்டமைக்கிறது.

நரம்பியல் காரணம்

நரம்பியல் காரணம்

இது ஒரு முழுமையான மனோபாவக் காரணி மற்றும் உணர்ச்சிக் கோளாறு. இதன் பொருள் ஒரு நபர் மற்றவர்களை விட மிகவும் தீவிரமாக முக்கிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். அத்தகைய நபர்கள் மிகச்சிறிய சூழ்நிலைகளுக்கு அதிக உணர்திறன் உடையவர்களாக மாறுகிறார்கள். எனவே அவர்கள் வழக்கத்தை விட அதிகமாக அழுகிறார்கள்.

கவலை

கவலை

அமெரிக்காவின் கவலை மற்றும் மனச்சோர்வு சங்கத்தின் கூற்றுப்படி, கவலைக் கோளாறுகள் மிகவும் பொதுவான மனநல நோயாகும். இங்குதான் நீங்கள் ஒரு மனநல ஆலோசக சிகிச்சையாளரை, ஒரு நிபுணரை அணுக வேண்டும்.

கோபத்திற்கான அவுட்லெட்

கோபத்திற்கான அவுட்லெட்

தங்கள் கோபம் வெளியில் வராததால் அழத் தொடங்கும் பலர் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் விரும்பினாலும் கையை உயர்த்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்களின் உணர்வு இன்னும் அப்படியே உள்ளது. எனவே, அவர்கள் கோபத்தை கூட கண்ணீருடன் வெளிப்படுத்துகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Decoding people who cry a lot in tamil

Here we are talking about the Decoding people who cry a lot in tamil.
Story first published: Monday, May 16, 2022, 22:02 [IST]
Desktop Bottom Promotion