Latest Updates
-
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து
கல்யாணம் பண்ணிக்கங்க! புற்றுநோய் வராது

வருமானம் அதிகமாகும்
பேச்சிலர் வாழ்க்கையில் என்னதான் சம்பாதித்தாலும் சேர்த்து வைப்பது சிரமம். அதே திருமணத்திற்கு பின்னர் என்றால் குடும்ப வரவு செலவு மனைவியின் கைக்கு போய்விடும் செலவு செய்யவேண்டியது போக மீதியை சேமித்து வைத்துவிடுவார். மனைவியும் வேலைக்கு போனால் இரட்டிப்பு வருமானம்தான்.
மதிப்பு கூடுதலாகும்
குடும்பஸ்தன் என்றாலே சமூகத்தில் கூடுதல் மதிப்புதான். எதையும் கேட்டு செய்வார்கள். அதேபோல் பணிபுரியும் இடத்திலும் பெர்பாமென்ஸ் அதிகமாகி புரமோசன் கூட கிடைக்குமாம். இது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும்
பேச்சிலர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தனியாக மண்டையை பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் திருமணம் முடிந்த பின்னரோ மனைவியுடன் கலந்து ஆலோசித்து பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
புற்றுநோய் வராதாம்
பேச்சிலராக இருப்பவர்களுக்கோ, விவாகரத்தானவர்களுக்கோ புற்றுநோய் வரும் வாய்ப்பு 11 முதல் 16 சதவிகிதம் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. அதுவே திருமணம் ஆனவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம். அமெரிக்காவின் மேரிலேண்ட் மர்லீன் பல்கலைக்கழக மாணவர்கள், பால்டிமோர் ஸ்டீவர்ட் கிரீனிபாம் புற்றுநோய் மையத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
நுரையீரல் புற்றுநோயின் 3ம் நிலையில் உள்ள மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை, 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 168 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட, திருமணமானவர்கள் 3 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. திருமணமாகாத ஆண்களை விட, திருமணமான பெண்களுக்கு 46 சதவீத உயிர் வாழும் திறன் அதிகமாக பெற்றுள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பல்வேறு நன்மைகள் இருப்பதால் பேச்சிலர்கள் இனியும் தள்ளிப்போடாமல் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்.



Click it and Unblock the Notifications