Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
கல்யாணம் பண்ணிக்கங்க! புற்றுநோய் வராது

வருமானம் அதிகமாகும்
பேச்சிலர் வாழ்க்கையில் என்னதான் சம்பாதித்தாலும் சேர்த்து வைப்பது சிரமம். அதே திருமணத்திற்கு பின்னர் என்றால் குடும்ப வரவு செலவு மனைவியின் கைக்கு போய்விடும் செலவு செய்யவேண்டியது போக மீதியை சேமித்து வைத்துவிடுவார். மனைவியும் வேலைக்கு போனால் இரட்டிப்பு வருமானம்தான்.
மதிப்பு கூடுதலாகும்
குடும்பஸ்தன் என்றாலே சமூகத்தில் கூடுதல் மதிப்புதான். எதையும் கேட்டு செய்வார்கள். அதேபோல் பணிபுரியும் இடத்திலும் பெர்பாமென்ஸ் அதிகமாகி புரமோசன் கூட கிடைக்குமாம். இது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும்
பேச்சிலர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தனியாக மண்டையை பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் திருமணம் முடிந்த பின்னரோ மனைவியுடன் கலந்து ஆலோசித்து பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
புற்றுநோய் வராதாம்
பேச்சிலராக இருப்பவர்களுக்கோ, விவாகரத்தானவர்களுக்கோ புற்றுநோய் வரும் வாய்ப்பு 11 முதல் 16 சதவிகிதம் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. அதுவே திருமணம் ஆனவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம். அமெரிக்காவின் மேரிலேண்ட் மர்லீன் பல்கலைக்கழக மாணவர்கள், பால்டிமோர் ஸ்டீவர்ட் கிரீனிபாம் புற்றுநோய் மையத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
நுரையீரல் புற்றுநோயின் 3ம் நிலையில் உள்ள மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை, 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 168 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட, திருமணமானவர்கள் 3 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. திருமணமாகாத ஆண்களை விட, திருமணமான பெண்களுக்கு 46 சதவீத உயிர் வாழும் திறன் அதிகமாக பெற்றுள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பல்வேறு நன்மைகள் இருப்பதால் பேச்சிலர்கள் இனியும் தள்ளிப்போடாமல் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்.



Click it and Unblock the Notifications