Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கல்யாணம் பண்ணிக்கங்க! புற்றுநோய் வராது

வருமானம் அதிகமாகும்
பேச்சிலர் வாழ்க்கையில் என்னதான் சம்பாதித்தாலும் சேர்த்து வைப்பது சிரமம். அதே திருமணத்திற்கு பின்னர் என்றால் குடும்ப வரவு செலவு மனைவியின் கைக்கு போய்விடும் செலவு செய்யவேண்டியது போக மீதியை சேமித்து வைத்துவிடுவார். மனைவியும் வேலைக்கு போனால் இரட்டிப்பு வருமானம்தான்.
மதிப்பு கூடுதலாகும்
குடும்பஸ்தன் என்றாலே சமூகத்தில் கூடுதல் மதிப்புதான். எதையும் கேட்டு செய்வார்கள். அதேபோல் பணிபுரியும் இடத்திலும் பெர்பாமென்ஸ் அதிகமாகி புரமோசன் கூட கிடைக்குமாம். இது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும்
பேச்சிலர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தனியாக மண்டையை பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் திருமணம் முடிந்த பின்னரோ மனைவியுடன் கலந்து ஆலோசித்து பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
புற்றுநோய் வராதாம்
பேச்சிலராக இருப்பவர்களுக்கோ, விவாகரத்தானவர்களுக்கோ புற்றுநோய் வரும் வாய்ப்பு 11 முதல் 16 சதவிகிதம் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. அதுவே திருமணம் ஆனவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம். அமெரிக்காவின் மேரிலேண்ட் மர்லீன் பல்கலைக்கழக மாணவர்கள், பால்டிமோர் ஸ்டீவர்ட் கிரீனிபாம் புற்றுநோய் மையத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
நுரையீரல் புற்றுநோயின் 3ம் நிலையில் உள்ள மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை, 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 168 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட, திருமணமானவர்கள் 3 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. திருமணமாகாத ஆண்களை விட, திருமணமான பெண்களுக்கு 46 சதவீத உயிர் வாழும் திறன் அதிகமாக பெற்றுள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பல்வேறு நன்மைகள் இருப்பதால் பேச்சிலர்கள் இனியும் தள்ளிப்போடாமல் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்.



Click it and Unblock the Notifications