Latest Updates
-
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்
சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா!!!

திருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கை துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் இருவருக்குமே 50/50 என்று இருக்கக்கூடாது. அது உங்களிடம் இருந்து 70% பாசமும், அவர்களிடம் 30% பாசமும் வந்தாலே போதும் என்று நினைக்க வேண்டும். அதிலும் பெண்கள் தனக்கு வருபரிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆண்களால் அவை அனைத்தையும் வெளிப்படையாக காண்பிக்க முடியாது. ஆனால் உண்மையில் ஆண்களின் மனதில், தன் மனைவியின் மீது, சொல்லமுடியாத அளவு ஆசை, பாசத்தை வைத்திருப்பர். ஆகவே அதனை புரிந்து பெண்கள் அவர்களை சந்தோஷமாக வைத்தால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமையும்.
சந்தோஷமான வாழ்க்கையில் சமாதானம் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் யார் மிகவும் சிறந்தவர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம்? வேறு யாராக இருக்க முடியும் ஆண்கள் தான். அவர்கள் தான், தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மனதை சமாதானப்படுத்திக் கொண்டு விரும்புவார்கள். உதாரணமாக, மனைவி என்ன தான் கேவலமாக சமைத்தாலும், கணவன் நன்றாக உள்ளது என்று கூறி அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். தனக்கு பிடிக்காத படம் மனைவிக்குப் பிடித்தால், அதையும் பொறுத்துக் கொண்டு பார்ப்பது. முக்கியமாக மனைவி எதை சொன்னாலும், "சரி டார்லிங்" என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடந்தால், அந்த திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
என்ன தான் சண்டை நடந்தாலும் தன் துணையை தன் உயிரைப் போன்று நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்தால், எவ்வளவு வயதாகினாலும், அந்த பாசமும், அனபும் மாறாமல் இருக்கும். இப்போது கூட நிறைய இடங்களில் வயதானவர்கள், தங்கள் துணையின் மீது வைத்துள்ள அன்பிற்கு ஈடுஇணை எதுவும் இருக்காது. ஆகவே திருமணத்திற்குப் பின்னும் டேட்டிங் மற்றும் ஒரு நல்ல நட்புறவு என்பது இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும். இதுவே அனைவரின் மனதிலும் பெரிதும் இருக்கும் எதிர்பார்ப்பு.
ஆகவே இவ்ற்றையெல்லாம் சரியாக கடைபிடிக்க முடியும் என்று நினைத்தால், வாழ்க்கையானது வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். இல்லையென்றால் பிரச்சனை வீடு கட்டி தங்கிவிடும் என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications