Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
உறவுப்பாலத்தை இணைக்கும் காதல் வங்கி: டெபாசிட்டை அதிகரிங்க

உணர்வுகளின் சங்கமம் மனித மூளையில்தான் நிகழ்கிறது. கோபமோ, அழுகையோ, காதலோ பாசமோ மூளையில்தான் உருவாகிறது. நீண்டகாலம் ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் மனித மூளையில் காதல் வங்கி ஒன்று இயங்குவதை கண்டறிந்துள்ளனர்.
இந்த காதல்வங்கியின் செயல்பாடுகளை பற்றி கூறியுள்ள ஆய்வாளர்கள், மூளையில் காதல் வங்கியை செயல்பட வைப்பது ஒருவித ரசாயன கலவை. காதலர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப் பூர்வமாக பார்க்கும்போது இந்த ரசாயன கலவை மின்னல் வேகத்தில் செயல்படுகிறது. ஆண்- பெண் காதல் வங்கியில் தங்களுக்கு பிடித்த முகம் "டெபாசிட்" செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயண மாற்றம் மாறாது. அந்த ரசாயணமே அந்த பெண்- ஆண் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.
அப்படிப் பார்க்கும்போது அந்தக் காதல் வங்கியின் செயல்பாடு முன்பை விட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களைத் தவிர வேறு எதையும் நாடாது என்று கூறியுள்ளனர். காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் பிடித்தமான பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பது, பாராட்டிப் பேசுவது, விட்டுக் கொடுப்பது போன்ற செயல்பாடுகளால் காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாகும். இந்த மாதிரியான சொல்களைத் தான் டெபாசிட் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
காதல் வங்கியில் "வித்டிரா" (எடுப்பு) அதிகரித்தால் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டு விடும். காதல் ஜோடி ஒருவரை ஒருவர் வெறுப்பது, திட்டிக் கொண்டிருப்பது, சந்தேகப்படுவது, நம்பிக்கை இல்லாதது, பொய் பேசுவது, பழி போடுவது போன்ற சொல்களில் ஈடுபடுவதை "எடுப்பு" என்கிறோம். இந்த எடுப்பு அதிகரித்தால் காதல் வங்கியில் உள்ள சேமிப்பு குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டிவிடும். இந்த பூஜ்ஜிய நிலை வரும் போதுதான் காதல் ஜோடி பிரியும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
காதல் வங்கியில் முக்கியமாக 5 விஷயங்கள் உள்ளன. 1. டெபாசிட், 2.எடுப்பு, 3. சேர்ந்து முடிவு, 4. காதலில் நேர்மை, 5. காதலுக்கு நேரம் ஒதுக்குவது. காதல் வங்கியில் அதிகம் டெபாசிட் செய்யவேண்டும். சேமிப்பு பூஜ்ஜியமாக இருந்தால் நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் வீட்டில் ஒரே போராட்டமாக இருக்கும். எனவே காதல் வங்கிகள் நாட்டில் பெருகினால் விவாகரத்துக்கள் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த வங்கி திவாலாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கையில்தான் உள்ளது.



Click it and Unblock the Notifications