Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
உறவுப்பாலத்தை இணைக்கும் காதல் வங்கி: டெபாசிட்டை அதிகரிங்க

உணர்வுகளின் சங்கமம் மனித மூளையில்தான் நிகழ்கிறது. கோபமோ, அழுகையோ, காதலோ பாசமோ மூளையில்தான் உருவாகிறது. நீண்டகாலம் ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் மனித மூளையில் காதல் வங்கி ஒன்று இயங்குவதை கண்டறிந்துள்ளனர்.
இந்த காதல்வங்கியின் செயல்பாடுகளை பற்றி கூறியுள்ள ஆய்வாளர்கள், மூளையில் காதல் வங்கியை செயல்பட வைப்பது ஒருவித ரசாயன கலவை. காதலர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப் பூர்வமாக பார்க்கும்போது இந்த ரசாயன கலவை மின்னல் வேகத்தில் செயல்படுகிறது. ஆண்- பெண் காதல் வங்கியில் தங்களுக்கு பிடித்த முகம் "டெபாசிட்" செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயண மாற்றம் மாறாது. அந்த ரசாயணமே அந்த பெண்- ஆண் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.
அப்படிப் பார்க்கும்போது அந்தக் காதல் வங்கியின் செயல்பாடு முன்பை விட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களைத் தவிர வேறு எதையும் நாடாது என்று கூறியுள்ளனர். காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் பிடித்தமான பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பது, பாராட்டிப் பேசுவது, விட்டுக் கொடுப்பது போன்ற செயல்பாடுகளால் காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாகும். இந்த மாதிரியான சொல்களைத் தான் டெபாசிட் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
காதல் வங்கியில் "வித்டிரா" (எடுப்பு) அதிகரித்தால் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டு விடும். காதல் ஜோடி ஒருவரை ஒருவர் வெறுப்பது, திட்டிக் கொண்டிருப்பது, சந்தேகப்படுவது, நம்பிக்கை இல்லாதது, பொய் பேசுவது, பழி போடுவது போன்ற சொல்களில் ஈடுபடுவதை "எடுப்பு" என்கிறோம். இந்த எடுப்பு அதிகரித்தால் காதல் வங்கியில் உள்ள சேமிப்பு குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டிவிடும். இந்த பூஜ்ஜிய நிலை வரும் போதுதான் காதல் ஜோடி பிரியும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
காதல் வங்கியில் முக்கியமாக 5 விஷயங்கள் உள்ளன. 1. டெபாசிட், 2.எடுப்பு, 3. சேர்ந்து முடிவு, 4. காதலில் நேர்மை, 5. காதலுக்கு நேரம் ஒதுக்குவது. காதல் வங்கியில் அதிகம் டெபாசிட் செய்யவேண்டும். சேமிப்பு பூஜ்ஜியமாக இருந்தால் நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் வீட்டில் ஒரே போராட்டமாக இருக்கும். எனவே காதல் வங்கிகள் நாட்டில் பெருகினால் விவாகரத்துக்கள் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த வங்கி திவாலாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கையில்தான் உள்ளது.



Click it and Unblock the Notifications