Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
டைவர்ஸுக்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?

மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வழியை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...
டைவர்ஸிற்குப் பின் ஆண்களின் மனநிலை...
1. முதலில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு பொறுப்பும் இருக்காது, ஒருவித சுதந்திரமாக இருப்பதாக நினைப்பார்கள். அவர்கள் ஒரு சுதந்திரப் பறவை போல் உணர்வார்கள். மேலும் ஆண்களுக்கு பொதுவாக எந்த ஒரு பிடிக்காத வாழ்க்கையும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும், பொறுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்கும் போது மனைவி நிறைய கண்டிசன் போட்டால் அவர்களுக்கு அது நரகமாகிவிடும். இப்போது அந்த வாழ்க்கை இல்லையென்று நினைக்கும் போது அவர்களைப் போல் சுதந்திரப் பறவை யாராகவும் இருக்க முடியாது என்பது போல் இருப்பார்கள்.
2. சமைக்கும் நேரத்தில் மிகவும் வருந்துவர். ஏனெனில் சமைத்து சாப்பிடவேண்டுமென்றால் அவர்களுக்கு பிடிக்காத விஷயம். அந்த நேரத்தில் அவர்கள் மனைவியை நினைத்து மிகவும் வருந்துவர். மேலும் சாப்பிட வேண்டுமென்றால் அருகில் இருக்கும் ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் போய் நண்பர்களோடு சாப்பிடுவது என்று இருக்கும். இப்படி சாப்பிடுவது கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் போக போக அழுத்துவிடும். இதுவே டைவர்ஸ் ஆன ஆண்களின் பெரும் கவலை ஆக இருக்கும்.
3. டைவர்ஸ் ஆகியதும், முதலில் ஆண்களின் மனதில் தோன்றுவது என்றால் அது "என் துணியை யார் துவைப்பர்? முதலில் ஒரு வேலைக்காரி வேண்டும்" என்பது தான். அப்போது அவர்கள் இதுவரை நம்மை பார்த்துக் கொண்ட, வீட்டை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொண்ட அவர்களது மனைவியை நினைப்பர். ஆனால் இப்போது... என்ற கேள்விக் குறி மனதில் வரும். மேலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு அவருடைய மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி நினைவுக்கு வரும். பிறகு பழைய கால காலேஜ் வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வந்து, அவர்கள் தங்களது லைப் ஸ்டைலையே மறுபடியும் மாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைப்பர்.
4. டைவர்ஸ் ஆனப் பின் மறுபடியும் 'பேச்சுலர்'. அப்போது அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். மேலும் இப்படியே தனியாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கவும் போவதில்லை. ஆகவே தனக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பெண்ணைப் பார்த்து தோன்றுகிறதோ, அவர்களிடம் அவர்கள் போய் பேசி பழகுவது என்றெல்லாம் நினைப்பர். அது தவறில்லையே!!!
5. சுதந்திரப் பறவை ஆனப் பின், இனிமேல் மனைவி தொல்லை இருக்காது. ஆகவே இனிமேல் "நான் என்ன செய்கிறேன்?", "எங்கு இருக்கிறேன்?", "எதற்கு? ஏன் தாமதம்?", "எங்கு சாப்பிட்டேன்?" என்று எந்த ஒரு கேள்வியும் வராது, யாரிடமும் சொல்லவும் தேவையில்லை என்றும் சந்தோஷமாக இருப்பர்.
ஆகவே மேற்கூரியவாறே ஆண்கள் டைவர்ஸிற்குப் பிறகு நினைப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











