Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
மாமனார், மாமியாருடன் வசிப்பதை விரும்பும் பெண்கள் அதிகரிப்பு

சாதி டாட் காம் எனப்படும் திருமண இணையதளம் புதிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. சர்வேயில் பங்கேற்ற பெண்களிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்குப் பின் கூட்டுக்குடும்பமாக வசிப்பீர்களா? தனிக்குடித்தனமாக இருக்கவே விரும்புவீர்களா? நகரங்களில் வசிப்பீர்களா? கிராமங்களில் வசிக்க விருப்பமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் 54 சதவிகித பெண்கள் மாமியார் மாமனார் போன்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல 21 சதவிகித பெண்கள் நியூக்ளியர் செட் அப் போல இருப்பதை விரும்புகின்றனராம். அதாவது தம்பதியர் ஜாலியாக தனியாக வசிப்பதே இந்த செட் அப்.
21 சதவிகித பெண்கள் கிராமங்களில் வசிப்பதை விட நகர்புறங்களில் வசிப்பதையே விரும்புகின்றனராம். மாமியார் மருமகள் சண்டை எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது என்று எண்ணற்ற இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். 20 பேர் வரை கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வசிக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கு காரணம் கூட்டுக்குடும்பம் என்றால் மிகப்பெரிய சப்போர்ட் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தன் கணவர் தன் குடும்பம் என்று சுயநலமிகளாக மாறிவரும் சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது சற்றே ஆறுதலான விசயம்தான்.



Click it and Unblock the Notifications