Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
உயிரைத் தீண்டும் உன்னத காதல் கடிதங்கள் !

உயிரில் இருந்து உருவான வார்த்தைகளை எடுத்து அதை மையில் கலந்து காகிதத்தில் வடிக்கும் கடிதத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். அதை கையில் எடுக்கும் போதே ரத்தத்தின் ஒவ்வொரு அணுக்களிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். அதேபோல் ஒரு காதல் கடிதத்தை இந்த காதலர் தினத்தில் உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளியுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுடையவர்க அடையும் மகிழ்ச்சியை.
உயிர் வரை ஊடுருவும்
நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயனமாற்றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும். முதல் நாள் பார்த்த இடத்தில் மறுநாளும் சந்திக்க மனம் ஏங்கும், கால்கள் தானகவே அந்த இடத்தை நோக்கி நகரும். இது காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள். எனவே நம்முடைய காதலை எங்கு எவ்விதம் தெரிவிப்பது என்று மனம் ஏங்கித் தவிக்கும். தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்துவதை விட மனதை தொடும் வகையில் கடிதம் எழுதி அதை கவித்துவமாக பரிசளிக்கலாம். காதல் உணர்வுகளுடன் கவித்துவமாய் வடித்த அந்த கடிதம் நிச்சயம் உங்களவரின் உயிர் வரை ஊடுருவும்.
ஸ்பெஷல் வார்த்தைகள்
காதல் கடிதம் எழுதுவது சாதரண விசயமல்ல. நலம் நலமறிய ஆவல்… என்ற சாதாரண வார்தைகளை இட்டு நிரப்பி தருவதை விட காதலை உணர்த்தும் வகையில் ஸ்பெசலான வார்த்தைகளைக் கொண்டு எழுதலாம்.
கடிதத்தில் முதலில் சந்தித்த இடம், ஈர்த்த விசயங்கள், போன்ற காதல் நினைவுகளை டச்சிங்காக எழுதலாம். அதே சமயம் அதீத அலங்கார வார்த்தைகள் போட்டு படிப்பவர்களை குழப்ப வேண்டாம். எனவே சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கடிதத்தை எழுதுங்கள் அது காதலுக்கு ஒகே சொல்ல வைக்கும்.
உயிர் வரை தொடும்
கடிதத்தில் தொடக்கம் எவ்விதம் காதல் வார்த்தைகள் நிரம்பியதாய் இருக்கவேண்டுமோ அதோபோல் முடிவும் காதல் உணர்வுகள் நிரம்பியதாக இருக்கவேண்டும்.
கடிதத்தின் உரையின் மீது சிவப்பு ரோஜாவை ஒட்டி, சிவப்பு நிற ரிப்பனால் இதய வடிவத்தில் கட்டி பார்க்கும் போதே ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தலாம். இத்தகைய கடிதங்கள் மனங்கவர்ந்தவரின் இதயத்தை ஊடுருவும்.



Click it and Unblock the Notifications