Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உயிரைத் தீண்டும் உன்னத காதல் கடிதங்கள் !

உயிரில் இருந்து உருவான வார்த்தைகளை எடுத்து அதை மையில் கலந்து காகிதத்தில் வடிக்கும் கடிதத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். அதை கையில் எடுக்கும் போதே ரத்தத்தின் ஒவ்வொரு அணுக்களிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். அதேபோல் ஒரு காதல் கடிதத்தை இந்த காதலர் தினத்தில் உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளியுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுடையவர்க அடையும் மகிழ்ச்சியை.
உயிர் வரை ஊடுருவும்
நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயனமாற்றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும். முதல் நாள் பார்த்த இடத்தில் மறுநாளும் சந்திக்க மனம் ஏங்கும், கால்கள் தானகவே அந்த இடத்தை நோக்கி நகரும். இது காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள். எனவே நம்முடைய காதலை எங்கு எவ்விதம் தெரிவிப்பது என்று மனம் ஏங்கித் தவிக்கும். தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்துவதை விட மனதை தொடும் வகையில் கடிதம் எழுதி அதை கவித்துவமாக பரிசளிக்கலாம். காதல் உணர்வுகளுடன் கவித்துவமாய் வடித்த அந்த கடிதம் நிச்சயம் உங்களவரின் உயிர் வரை ஊடுருவும்.
ஸ்பெஷல் வார்த்தைகள்
காதல் கடிதம் எழுதுவது சாதரண விசயமல்ல. நலம் நலமறிய ஆவல்… என்ற சாதாரண வார்தைகளை இட்டு நிரப்பி தருவதை விட காதலை உணர்த்தும் வகையில் ஸ்பெசலான வார்த்தைகளைக் கொண்டு எழுதலாம்.
கடிதத்தில் முதலில் சந்தித்த இடம், ஈர்த்த விசயங்கள், போன்ற காதல் நினைவுகளை டச்சிங்காக எழுதலாம். அதே சமயம் அதீத அலங்கார வார்த்தைகள் போட்டு படிப்பவர்களை குழப்ப வேண்டாம். எனவே சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கடிதத்தை எழுதுங்கள் அது காதலுக்கு ஒகே சொல்ல வைக்கும்.
உயிர் வரை தொடும்
கடிதத்தில் தொடக்கம் எவ்விதம் காதல் வார்த்தைகள் நிரம்பியதாய் இருக்கவேண்டுமோ அதோபோல் முடிவும் காதல் உணர்வுகள் நிரம்பியதாக இருக்கவேண்டும்.
கடிதத்தின் உரையின் மீது சிவப்பு ரோஜாவை ஒட்டி, சிவப்பு நிற ரிப்பனால் இதய வடிவத்தில் கட்டி பார்க்கும் போதே ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தலாம். இத்தகைய கடிதங்கள் மனங்கவர்ந்தவரின் இதயத்தை ஊடுருவும்.



Click it and Unblock the Notifications











