Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
நீரிழிவு நோயாளிகளுக்கான... சுவையான தால் கபிலா ரெசிபி
நீரிழிவு நோய் இருந்தால், எந்த உணவையும் சந்தோஷமாக சாப்பிட முடியாது. எதை சாப்பிடுவதாக இருந்தாலும், ஒருமுறைக்கு இரண்டு முறை நன்கு யோசித்து தான் சாப்பிட வேண்டியிருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, நீரிழிவு நோயாளிகளுக்காக ஒரு சுவையான தால் ரெசிபியைக் கொடுத்துள்ளது. இந்த ரெசிபிக்கு தால் கபிலா என்று பெயர்.
இது ஒரு மொகலாய ரெசிபி. இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. குறிப்பாக இந்த ரெசிபியை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதால் இருந்தால், சிறிது காரம் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அந்த தால் கபிலா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு 1 கப்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
வரமிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வரமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கி, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
இறுதியில் குக்கரில் வேக வைத்துள்ள உளுத்தம் பருப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
இறுதியில் கொத்தமல்லியை மேலே தூவினால், சுவையான தால் கபிலா ரெடி!!!



Click it and Unblock the Notifications