Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பன்னீர் சாண்ட்விச்
தற்போது காலை உணவுகளில் ஒன்றாகிவிட்டது சாண்ட்விச். ஏனெனில் காலையில் அவசரமாக செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் எளிமையாக இருக்கிறது. இத்தகைய சாண்ட்விச்சில் நிறைய உள்ளன. இப்போது அதில் ஒன்றான அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருளான பன்னீரைக் கொண்டு எப்படி சாண்ட்விச் செய்வதென்று கொடுத்துள்ளோம்.
இந்த பன்னீர் சாண்ட்விச்சில் உள்ள ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பன்னீரைக் கொண்டு ஒரு மசாலா போன்று செய்து பின் பிரட்டில் பயன்படுத்துவது தான். சரி, அந்த பன்னீர் சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 100 கிராம்
பிரட் துண்டுகள் - 8-10
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அதே சமயம் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியில் மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
பன்னீரானது கலவையுடன் நன்கு ஒன்று சேர்ந்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து டோஸ்ட்டரை சூடேற்ற வேண்டும்.
பிறகு ஒரு பிரட்டை எடுத்து, அதில் பன்னீர் கலவையை பரப்பி, மற்றொரு பிரட்டினால் மூடி, பின் பிரட்டின் மேல் வெண்ணெயை தடவி டோஸ்ட்டரில் வைத்து, டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட்டையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications











