Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி
காராமணியை வைத்து பலவாறு சமைக்கலாம். அதில் பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி தான் மிகவும் பிரபலமானது. மேலும் இந்த ஸ்டைல் காராமணி ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டிற்குமே மிகவும் சூப்பராக இருக்கும்.
அதுமட்டுமின்றி, இந்த ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபியானது செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி - 1 கப் (ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்து, வாணலியில் ஊற்றி, சற்று கெட்டியான கிரேவி போன்று வரும் போது சுவை பார்த்து இறக்கினால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி ரெடி!



Click it and Unblock the Notifications











