Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
பன்னீர் தக்காளி கிரேவி
பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அதனை மதிய வேளையில் செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்து பார்க்கலாம். அந்த அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.
இந்த ரெசிபிக்கு பன்னீர் தக்காளி கிரேவி என்று பெயர். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூனி
பிரியாணி இலை - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். அதே சமயத்தில் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வெங்காய பேஸ்ட் பொன்னிறமாகும் வரை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தக்காளி சாஸ் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தீயை அதிகரித்து, 2-3 நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் தக்காளி கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications