Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பன்னீர் தக்காளி கிரேவி
பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அதனை மதிய வேளையில் செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்து பார்க்கலாம். அந்த அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.
இந்த ரெசிபிக்கு பன்னீர் தக்காளி கிரேவி என்று பெயர். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூனி
பிரியாணி இலை - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். அதே சமயத்தில் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வெங்காய பேஸ்ட் பொன்னிறமாகும் வரை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தக்காளி சாஸ் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தீயை அதிகரித்து, 2-3 நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் தக்காளி கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications