ஈசியா செய்யலாம் நெய் சாதம்

By Mayura Akilan

Ghee Rice Recipe
வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது. எளிதில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பொன்னி அரிசி – கால் கிலோ

நெய் - 100 கிராம்

பட்டை - 3 துண்டுகள் (சிறியது)

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

பூண்டு - 7 பல்

பிரியாணி இலை - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நெய்சாதம் செய்முறை

அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றவும். காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். பிறகு முந்திரி சேர்க்கவும். வடிகட்டிய அரிசியை அடுப்பில் உள்ள நெய்யில் போட்டு கிளறவும்.

இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும். சுவையான நெய் சாதம் தயார். இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்.

Story first published: Tuesday, April 17, 2012, 14:24 [IST]
Desktop Bottom Promotion