Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் தால்
இதுவரை பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் சிம்பிளான பாகற்காய் தால் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளது.
இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பாகற்காய் தால் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்‘
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பாகற்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றம் பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மற்றொரு அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை வாணலியில் ஊற்றி, அத்துடன் உப்பு, புளிச்சாறு, நாட்டுச்சர்க்கரை, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் மீண்டும் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பிறகு மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், பாகற்காய் தால் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications