Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
பேச்சுலர்களுக்கான... துவரம் பருப்பு கடைசல்
வாரம் ஒரு முறை பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு துவரம் பருப்பைக் கொண்டு எப்படி மதிய வேளையில் சாத்திற்கு ஒரு சைடு டிஷ் செய்வது என்று கொடுத்துள்ளோம். இது மிகவும் ஈஸியானது.
குறிப்பாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த துவரம் பருப்பு கடைசலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 3
பூண்டு - 5 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து துவரம் பருப்பை லேசாக மத்து கொண்டு கடைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான துவரம் பருப்பு கடைசல் ரெடி!!!
Image Courtesy: Sathishkumar



Click it and Unblock the Notifications
