Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பேச்சுலர்களுக்கான... துவரம் பருப்பு கடைசல்
வாரம் ஒரு முறை பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு துவரம் பருப்பைக் கொண்டு எப்படி மதிய வேளையில் சாத்திற்கு ஒரு சைடு டிஷ் செய்வது என்று கொடுத்துள்ளோம். இது மிகவும் ஈஸியானது.
குறிப்பாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த துவரம் பருப்பு கடைசலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 3
பூண்டு - 5 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து துவரம் பருப்பை லேசாக மத்து கொண்டு கடைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான துவரம் பருப்பு கடைசல் ரெடி!!!
Image Courtesy: Sathishkumar



Click it and Unblock the Notifications