Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
தக்காளியும், பன்னீரையும் வெச்சு 15 நிமிடத்தில் இப்படியொரு சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Tomato Paneer Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் ஒரு டக்கரான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று ஏதாவது செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், பன்னீரும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்யுங்கள். இந்த தக்காளி பன்னீர் சைடு டிஷ் 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஏனெனில் இதற்கு அரைக்கும் போதே அனைத்து பொருட்களையும் சேர்த்துவிட வேண்டும். இதனால் இந்த டிஷ்ஷை வேகமாக செய்து விடலாம்.

உங்களுக்கு தக்காளி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 3
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 துண்டு
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், இஞ்சி,
மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின், துருவி வைத்துள்ள
பன்னீரை சேர்த்து, அத்துடன் கசூரி மெத்தி மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெயை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
தக்காளி பன்னீர் தயார்.



Click it and Unblock the Notifications











