Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
தக்காளி கார சட்னி
பொதுவாக கார சட்னி செய்ய வேண்டுமானால், தக்காளி, வெங்காயம் அவசியம் தேவை. ஆனால் உங்கள் வீட்டில் தக்காளி உண்டு, வெங்காயம் இல்லையா? அப்படியானால் தக்காளி, பூண்டு, வரமிளகாய் கொண்டே சுவையான கார சட்னி செய்யலாம்.
இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு சற்று புளிப்பாக மற்றும் காரமாக ஒரு சட்னியை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? பொதுவாக கார சட்னி செய்ய வேண்டுமானால், தக்காளி, வெங்காயம் அவசியம் தேவை. ஆனால் உங்கள் வீட்டில் தக்காளி உண்டு, வெங்காயம் இல்லையா? அப்படியானால் தக்காளி, பூண்டு, வரமிளகாய் கொண்டே சுவையான கார சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டீஸ்பூன் அல்லது 1 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது அந்த எண்ணெயில் தக்காளி, புளி, சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, வரமிளகாய் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
