Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
ருசியான... தவா பன்னீர் மசாலா
உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி என்றால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள், சப்பாத்திக்கு அற்புதமான தவா பன்னீர் மசாலாவை செய்யலாம்.
பல வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி என்றால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் மதியத்தில் இருந்து யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக தவா பன்னீர் மசாலாவை செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இது ஒரு எளிமையான ரெசிபி. முக்கியமாக 15 நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய அளவில் ஈஸியானது.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை ஈஸியாக எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையைப் படித்து பின்பற்றுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோரின் நாவிற்கு விந்தளிக்கும் வகையில் ருசியான ஒன்றாக இருக்கும். இப்போது தவா பன்னீர் மசாலாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* தவா பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் தவா தேவை. ஒருவேளை தவா இல்லாவிட்டால், கடாயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்போது ரெசிபிக்கு போகலாம்.
* அடுப்பில் தவாவை வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, மிளகாய் தூள், சீரகப் கொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்து பச்சை வாசனை போன பின், மசாலாவானது நீரின்றி வறண்டு இருக்கும். அப்போது சிறிது நீர் தெளித்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா பன்னீருடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதன் மேல் காய்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி தூவி, கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தவா பன்னீர் மசாலா தயார்!
குறிப்பு:
* மசாலா பொடிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
* மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு செமி கிரேவி. உங்களுக்கு கிரேவி அதிகம் வேண்டுமானால், இன்னொரு தக்காளியை அரைத்து ஊற்றலாம்.
* தக்காளியை அரைத்து ஊற்ற விரும்பாதவர்கள், அப்படியே துண்டுகளாக்கியும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications