Latest Updates
-
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா?
அன்னையர் தின ஸ்பெஷல்: குலாபி ஃபெர்னி
அன்னையர் தினத்தன்று அம்மாக்களுக்கு ஸ்பெஷலாகவும், அவர்களுக்கு புதுமையானதாகவும் ஏதேனும் ஒரு ரெசிபி செய்ய நினைத்தால் குலாபி ஃபெர்னி சரியானதாக இருக்கும்.
ஃபெர்னி என்பது ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபிக்களில் பால் மற்றும் அரிசியைக் கொண்டு செய்யக்கூடியது. பொதுவாக இந்தியாவில் ஏதேனும் விஷேசம் என்றால் பாயாசம், கேசரி போன்றவற்றை காலை வேளையில் செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் அன்னையர் தினம் வரப் போகிறது.
அந்த தினத்தன்று அன்புள்ளம் கொண்ட அம்மாக்களுக்கு ஸ்பெஷலாகவும், அவர்களுக்கு புதுமையானதாகவும் ஏதேனும் ஒரு ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு குலாபி ஃபெர்னி சரியானதாக இருக்கும். இப்போது அந்த குலாபி ஃபெர்னியை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1/2 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
ரோஸ் இதழ்கள் - அலங்கரிக்க
செய்முறை:
பாசுமதி அரிசியை 1/2 கப் தண்ணீரில், 1 மணிநேரத்திற்கு ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் ரோஸ் சிரப் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள பாசுமதி அரிசியை, பாலுடன் சேர்த்து, தொடர்ந்து கெட்டி கெட்டியாக இருக்காதவாறு 15 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கலவையானது சற்று கேசரி போன்ற பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும்.
பின்பு அதன் மேல் ஏலக்காய் பொடி தூவி, கிளறி விட்டு, குளிர வைத்து, பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் ரோஜா இதழ்கள் மற்றும் பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான குலாபி ஃபெர்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications