Just In
- 11 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பசலைக்கீரை சாம்பார்
உங்களுக்கு கீரையைக் கொண்டு கடைந்தோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சாம்பார் செய்து சுவையுங்கள்.
கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு கடைந்தோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சாம்பார் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதுவும் பசலைக்கீரை கொண்டு சாம்பார் செய்தால் சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு பசலைக்கீரை கொண்டு சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பசலைக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பசலைக்கீரை - 2-3 கப் (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கருப்பு சுண்டல் - 1/2 கப் (ஊற வைத்தது)
* சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் கருப்பு சுண்டலை சேர்த்து, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், பசலைக்கீரை சாம்பார் தயார்.
Image Courtesy: naliniscooking