Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
ஜவ்வரிசி வடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
கிருஷ்ண ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரது வீட்டிலும் பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், ஜவ்வரிசி வடை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சிம்பிள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 3/4 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது)
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ஜவ்வரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை கலவையில் நீர் அதிகம் இருந்தால், அத்துடன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடைப் போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications