Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
தேங்காய் சட்னியை அரைக்கும் போது இந்த 2 பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Red Coconut Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் பெரும்பாலும் தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னியை செய்து போடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னி செய்யும்போது, அத்துடன் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, பொட்டுக்கடலை எதுவும் சேர்க்காமல் அரைத்துப் பாருங்கள்.
இப்படி செய்யும் போது சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியின் ஸ்பெஷலே வரமிளகாய் தான். எனவே உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் இந்த சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வரமிளகாய் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/4 மூடி
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல்
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1 (விதைகளை நீக்கியது)
செய்முறை:
* முதலில் அரை மூடி தேங்காயை எடுத்து, அதை சிறு துண்டுகளாகவோ
அல்லது துருவியோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துருவிய தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, புளி, உப்பு மற்றும் சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சட்னி கெட்டியாக இருந்தால், தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான வரமிளகாய்
தேங்காய் சட்னி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications











