Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
தேங்காய் சட்னியை அரைக்கும் போது இந்த 2 பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Red Coconut Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் பெரும்பாலும் தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னியை செய்து போடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னி செய்யும்போது, அத்துடன் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, பொட்டுக்கடலை எதுவும் சேர்க்காமல் அரைத்துப் பாருங்கள்.
இப்படி செய்யும் போது சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியின் ஸ்பெஷலே வரமிளகாய் தான். எனவே உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் இந்த சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வரமிளகாய் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/4 மூடி
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல்
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1 (விதைகளை நீக்கியது)
செய்முறை:
* முதலில் அரை மூடி தேங்காயை எடுத்து, அதை சிறு துண்டுகளாகவோ
அல்லது துருவியோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துருவிய தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, புளி, உப்பு மற்றும் சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சட்னி கெட்டியாக இருந்தால், தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான வரமிளகாய்
தேங்காய் சட்னி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications