Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
தினமும் காலையில் 1 டம்ளர் இந்த ராகி பாலை குடிங்க..அப்புறம் பாருங்க எப்படி ஒல்லியானீங்க-ன்னு கேப்பாங்க..
Ragi Paal Recipe In Tamil: காலை வேளையில் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியமாசமாக சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா?
அப்போது ராகியை தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து, அந்த பாலை அடுப்பில் வைத்து, நன்கு காய்ச்சி இறக்கி, சுவைக்கேற்ப இனிப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறினால், சுவையான ராகி பால் தயார். இந்த பாலை அவ்வப்போது காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் வலுவாக இருக்கும் மற்றும் தொப்பையும் குறையும்.

உங்களுக்கு ராகி பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி - 4 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் - 1
* உப்பு - 1 சிட்டிகை
* நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ராகியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதை 2-3 முறை கைகளால்
நன்கு பிசைந்து விட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் ஊற வைத்த ராகியை சேர்த்து,
அத்துடன் தேங்காய் துண்டுகளையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை விரித்து,
அதில் அரைத்த ராகியை ஊற்றி, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த ராகி பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து, தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் 1 சிட்டிகை உப்பு
மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஏலக்காயை தட்டிப் போட்டு
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ராகி பால் தயார்.



Click it and Unblock the Notifications