Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2 ஸ்பூன் பொட்டுக்கடலை இருந்த போதும் தோசைக்கு அட்டகாசமான சைடிஷ் 10 நிமிஷத்துல செஞ்சுரலாம்...!
Pottukadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான தமிழக வீடுகளில் பிரதான உணவாக இருப்பது தோசைதான். தினமும் சாப்பிட்டாலும் பெருமபாலும் நமக்கு தோசை போரடிப்பதில்லை. ஆனால் ஒரே மாதிரியான தேங்காய் சட்னி மற்றும் கார சட்னியுடன் சாப்பிடும் போது தோசை கூட நமக்கு போரடித்து விடும். இந்த சூழ்நிலையில் நாம் தோசைக்கு புதிய சைடிஷ் கண்டறிய வேண்டியது கட்டாயமாகிறது.
பொதுவாக பொட்டுக்கடலையை வைத்து தோசைக்கு சட்னி மட்டுமே அரைப்போம். ஆனால் பொட்டுக்கடலையை வைத்தே தோசைக்கு சூப்பரான சைடிஷ் ஒன்றை செய்யலாம். இந்த பொட்டுக்கடலை குழம்பு தோசை மட்டுமின்றி, இட்லி, பணியாரம் மற்றும் சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். இந்த பொட்டுக்கடலை குருமாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு
- பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/2 மூடி
- வரமிளகாய் - 4
- சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
- நறுக்கிய பெரிய தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
-கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய், வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் நீரை சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
- இதை சூடாக இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட தாறுமாறாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











