Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2 ஸ்பூன் பொட்டுக்கடலை இருந்த போதும் தோசைக்கு அட்டகாசமான சைடிஷ் 10 நிமிஷத்துல செஞ்சுரலாம்...!
Pottukadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான தமிழக வீடுகளில் பிரதான உணவாக இருப்பது தோசைதான். தினமும் சாப்பிட்டாலும் பெருமபாலும் நமக்கு தோசை போரடிப்பதில்லை. ஆனால் ஒரே மாதிரியான தேங்காய் சட்னி மற்றும் கார சட்னியுடன் சாப்பிடும் போது தோசை கூட நமக்கு போரடித்து விடும். இந்த சூழ்நிலையில் நாம் தோசைக்கு புதிய சைடிஷ் கண்டறிய வேண்டியது கட்டாயமாகிறது.
பொதுவாக பொட்டுக்கடலையை வைத்து தோசைக்கு சட்னி மட்டுமே அரைப்போம். ஆனால் பொட்டுக்கடலையை வைத்தே தோசைக்கு சூப்பரான சைடிஷ் ஒன்றை செய்யலாம். இந்த பொட்டுக்கடலை குழம்பு தோசை மட்டுமின்றி, இட்லி, பணியாரம் மற்றும் சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். இந்த பொட்டுக்கடலை குருமாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு
- பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/2 மூடி
- வரமிளகாய் - 4
- சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
- நறுக்கிய பெரிய தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
-கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய், வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் நீரை சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
- இதை சூடாக இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட தாறுமாறாக இருக்கும்.



Click it and Unblock the Notifications