Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா செய்வது எப்படி?
Mangalore Kara Bonda: என்ன தான் கோடைக்காலமாக இருந்தாலும், பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் பலருக்கும் மாலை வேளையில் நன்கு சூடாக பஜ்ஜி, போண்டா என்று ஏதாவது சாப்பிடத் தோன்றும். இன்று மாலை உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸாக என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்பெஷல் கார போண்டாவை செய்யுங்கள்.
இந்த கார போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த மங்களூர் ஸ்டைல் கார போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புளித்த தயிர் - 1/2 கப்
* சமையல் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, ரவை, பொடியாக
நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் புளித்த தயிர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து போண்டா மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை தண்ணீர் சேர்க்காமல்
கலக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீரைத் தெளித்து பிசைய
வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் ஆனதும், அதில் சமையல் சோடாவை சேர்த்து நன்கு பிசைய
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கையை நீரில் நனைத்து பிசைந்து
வைத்துள்ள மாவை சிறிது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால்,
மங்களூர் ஸ்டைல் கார போண்டா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications









