Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Madurai Rottukadai Mutton Salna Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் வித்தியாசமான சுவையுடைய மட்டன் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னாவை செய்யுங்கள்.
இந்த சால்னா பூரி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த குழம்பை வைத்தால், பின் அடிக்கடி இந்த குழம்பை செய்வீர்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 8
* ஜாவித்திரி - பாதி
* அன்னாசிப்பூ - 1
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* கல்பாசி - 1 பெரிய துண்டு
* ஜாதிக்காய் - சிறிது
சால்னாவிற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மட்டன் கொழுப்பு - 75 கிராம்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெஞ்செலும்பு கறி - 150 கிராம்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* அரைத்த மசாலா பொடி
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 லிட்டர்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஜாவித்திரி,
அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு, மிளகு, கல்பாசி, சிறிது ஜாதிக்காய்
சேர்த்து பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை,
வேர்க்கடலை, கசகசா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், கல்பாசி, பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டன் கொழுப்பு சேர்த்து, அதோடு காஷ்மீரி மிளகாய்
தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மட்டன் நெஞ்செலும்பு கறியை சேர்த்து, நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், அரைத்த மசாலா பொடி,
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் அந்த குக்கரை
வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 5
நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி
கிளறி, நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* கடைசியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள்
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி,
கொத்தமல்லி மற்றும் புதினாவை சிறிது தூவி கிளறி இறக்கினால், சுவையான
மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னா தயார்.



Click it and Unblock the Notifications