Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சைடு டிஷ் ஏதும் செய்யாம தோசை சாப்பிடணுமா? அப்ப கடப்பா கார தோசையை செய்யுங்க...
Kadappa Karam Dosa Recipe In Tamil: தினமும் காலையில் வெறும் தோசை செய்து, சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக ஆந்திராவில் ராயல்சீமா பகுதியில் மிகவும் பிரபலமான கடப்பா காரம் தோசையை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
இந்த தோசைக்கு தனியாக ஒரு பொடியை அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கார சட்னியை தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்து தோசையை சுட்டு, மேலே சட்னியை பரப்பி, பொடியைத் தூவி எடுக்க வேண்டும். இந்த தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. ஒருவேளை செய்ய நினைத்தால், சாம்பார் செய்யலாம். இப்படி உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை தோசையை சுட்டுக் கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கடப்பா காரம் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடப்பா காரம் தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - தேசையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
பொடிக்கு..
* பொட்டுக்கடலை - 1/3 கப்
* பூண்டு - 2 பல்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
சட்னிக்கு...
* வரமிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாயை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு, உப்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள வரமிளகாய், வெங்காயம், சீரகம்,
பூண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை மாவைக்
கொண்டு தோசை ஊற்றி, 1 நிமிடம் கழித்து, மேலே அரைத்து வைத்துள்ள
சட்னியை பரப்பி, அதன் மேல் பொட்டுக்கடலை பொடியைத் தூவி, எண்ணெய்
ஊற்றி, தோசையை திருப்பி போடாமல், அப்படியே மடித்து எடுத்தால், சுவையான
கடப்பா காரம் தோசை தயார்.
Image Courtesy: Cooking From Heart



Click it and Unblock the Notifications











