Latest Updates
-
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா?
ஜோத்புரி ஆலு ரெசிபி
உங்களுக்கு வட இந்திய உணவுகள் பிடிக்குமா? வீட்டில் அதை செய்து பார்க்க விரும்புவீர்களா? அப்படியானால் இன்று உங்களுக்கு ஜோத்புரி ஆலு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
உங்களுக்கு வட இந்திய உணவுகள் பிடிக்குமா? வீட்டில் அதை செய்து பார்க்க விரும்புவீர்களா? அப்படியானால் இன்று உங்களுக்கு ஜோத்புரி ஆலு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த ஜோத்புரி ஆலு சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது காரமாக மட்டுமின்றி, சற்று புளிப்பாகவும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இப்போது ஜோத்புரி ஆலு ரெசிபியின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* வெங்காய விதைகள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கடாயில் அதைப் போட்டு, உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி, உருளைக்கிழங்கு நன்கு வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், வெங்காய விதை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு, எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மாங்காய் தூள் தவிர மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியில் மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஜோத்புரி ஆலு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











