Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
3/4 கப் தயிர் இருந்தா அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
Curd Kara Chutney Recipe In Tamil: காலை வேளை வந்தாலே பெண்களுக்கு என்ன சமையல் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதுவும் எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், இட்லி, தோசைக்கு என்ன சட்னியை இன்று செய்வது என்று முடிவெடுப்பது கடினமாக இருக்கும்.
நீங்கள் இன்று வீட்டில் இட்லி தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், 3/4 கப் தயிர் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த தயிர் கார சட்னியை ஒருமுறை செய்தால், 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு தயிர் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி தயிர் - 3/4 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 12 பல் (அரைத்துக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 3/4 கப் கெட்டித் தயிரை எடுத்து அதை நன்கு
அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கக வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
அரைத்து வைத்துள்ள பூண்டு மற்றும் 1 கொத்து கறிவேப்பிலையை சேர்த்து
நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதை அதில்
உள்ள நீர் வற்றும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
தயிர் கார சட்னி தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications