Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
இட்லிக்கு தேங்காய் சட்னியை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி இப்படி தான் செய்வீங்க...
Coconut Thanni Chutney Recipe: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு சட்னி தான் பிடிக்குமா?
அதுவும் நீங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை தேங்காய் சட்னியை இந்த ஸ்டைலில் செய்யுங்கள். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். மேலும் வீட்டில் இருப்போரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தேங்காய் தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல்
* வரமிளகாய் - 6
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி,
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பூண்டு, வரமிளகாயை சேர்த்து, அத்துடன்
துருவிய தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணி சட்னி என்பதால், அதில் நீரை கொஞ்சம் அதிகமாக ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு பொன்னிறமாக வதக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
தேங்காய் தண்ணி சட்னி தயார்.
Image Courtesy: Apoorvas Nalabagam



Click it and Unblock the Notifications











