Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சிம்பிளான... குடைமிளகாய் பொரியல்
நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது.
பலருக்கு மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் தினமும் புதுப்புது சுவையில் பொரியலை சாப்பிட விரும்புவார்கள். அந்த வகையில் நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த குடைமிளகாயை பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை குடைமிளகாய் கொண்டு செய்யப்படும் ஒரு அற்புதமான எளிய பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2
* தக்காளி - 3
* பெரிய வெங்காயம் - 1
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
* தக்காளி நன்கு வதங்கிய பின், குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











