Just In
- 14 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சிம்பிளான... குடைமிளகாய் பொரியல்
நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது.
பலருக்கு மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் தினமும் புதுப்புது சுவையில் பொரியலை சாப்பிட விரும்புவார்கள். அந்த வகையில் நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த குடைமிளகாயை பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை குடைமிளகாய் கொண்டு செய்யப்படும் ஒரு அற்புதமான எளிய பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2
* தக்காளி - 3
* பெரிய வெங்காயம் - 1
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
* தக்காளி நன்கு வதங்கிய பின், குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.