Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பாம்பே சட்னி
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

மேலும் இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அதிக காரம் இல்லாமல் இருக்கும். உங்களுக்கு பாம்பே சட்னி அல்லது கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சி செய்யுங்கள். முக்கியமாக இந்த சட்னியை செய்து சுவைத்த பின் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும்.
* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் கடவை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
* பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
* கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார்!
குறிப்பு:
உங்களுக்கு சட்னி சற்று புளிப்பாக வேண்டுமானால், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











