Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பாம்பே சட்னி
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

மேலும் இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அதிக காரம் இல்லாமல் இருக்கும். உங்களுக்கு பாம்பே சட்னி அல்லது கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சி செய்யுங்கள். முக்கியமாக இந்த சட்னியை செய்து சுவைத்த பின் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும்.
* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் கடவை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
* பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
* கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார்!
குறிப்பு:
உங்களுக்கு சட்னி சற்று புளிப்பாக வேண்டுமானால், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications