Just In
- 8 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாம்பே சட்னி
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
மேலும் இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அதிக காரம் இல்லாமல் இருக்கும். உங்களுக்கு பாம்பே சட்னி அல்லது கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சி செய்யுங்கள். முக்கியமாக இந்த சட்னியை செய்து சுவைத்த பின் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும்.
* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் கடவை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
* பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
* கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார்!
குறிப்பு:
உங்களுக்கு சட்னி சற்று புளிப்பாக வேண்டுமானால், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.