Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
சப்பாத்தி, பூரிக்கு 10 நிமிஷத்துல செய்யுற சூப்பரான பாம்பே சட்னி... செஞ்சு பாருங்க... எல்லாரும் அசந்துருவாங்க!
Bombay Chutney Recipe in Tamil: பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான உணவாக இருக்கும் இட்லி, தோசைக்கு புதுப்புது சைடிஷ்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் எப்போதும் போல தேங்காய் மற்றும் தக்காளி சட்னி வைத்தே இவற்றை சாப்பிட்டால் சில வாரங்களிலேயே போரடித்துவிடும். இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கும் பாம்பே சட்னி சிறந்த சைடிஷாக இருக்கும்.
பாம்பே சட்னி பொதுவாக கடலை மாவு சட்னி என்றும் அழைக்கப்படுகிறது, இது முழு மசாலா, வெங்காயம்-தக்காளி மற்றும் பிற பொருட்களுடன் கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சூப்பரான சட்னியாகும். இது பல சாலையோர கடைகளில் இட்லி, தோசைக்கு பிரதானமான சட்னியாக பரிமாறப்படுகிறது. இந்த சுவையான சட்னியை செய்வது மிகவும் எளிதானது. இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் கடலை மாவு
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 நறுக்கிய தக்காளி
- அரை கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1/2 ஸ்பூன் பெருங்காயம்
- 1 அங்குல இஞ்சி
- 3 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- 2 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துகொண்டு தண்ணீர்
சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். தண்ணீர் தாராளமாகவே
சேர்க்கலாம். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். இதில் 1 டீஸ்பூன்
கடுகு, ½ டீஸ்பூன் கடலைப் பருப்பு, ½ டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ½
டீஸ்பூன் சீரகம், 2 வர மிளகாய், சில கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு
பெருங்காயம் சேர்க்கவும். இது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- மேலும் 1 இன்ச் இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் உப்பு, ¼
தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை
வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் 1 தக்காளி, 1 கப் தண்ணீர் சேர்த்து
மூடி வைத்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
- இதில் தயார் செய்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு
கலக்கவும்.
- கடலை மாவு கெட்டியாக ஆரம்பித்தவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு
கிளறவும்.
- தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சட்னியின் நிலைத்தன்மையை
சரிசெய்யவும். இந்த சட்னி இறக்கி வைத்ததும் கெட்டியாகி விடுவதால்,
சட்னியின் நிலைத்தன்மைக்காக தண்ணீர் அதிகம் ஊற்றவும்.
- சட்னி நன்கு கொதித்து கெட்டியாக மாறும்வரை காத்திருக்கவும்.
- இப்போது நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சூப்பரான பாம்பே சட்னி ரெடி, இதை பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன்
சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications


