Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
சப்பாத்தி, பூரிக்கு 10 நிமிஷத்துல செய்யுற சூப்பரான பாம்பே சட்னி... செஞ்சு பாருங்க... எல்லாரும் அசந்துருவாங்க!
Bombay Chutney Recipe in Tamil: பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான உணவாக இருக்கும் இட்லி, தோசைக்கு புதுப்புது சைடிஷ்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் எப்போதும் போல தேங்காய் மற்றும் தக்காளி சட்னி வைத்தே இவற்றை சாப்பிட்டால் சில வாரங்களிலேயே போரடித்துவிடும். இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கும் பாம்பே சட்னி சிறந்த சைடிஷாக இருக்கும்.
பாம்பே சட்னி பொதுவாக கடலை மாவு சட்னி என்றும் அழைக்கப்படுகிறது, இது முழு மசாலா, வெங்காயம்-தக்காளி மற்றும் பிற பொருட்களுடன் கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சூப்பரான சட்னியாகும். இது பல சாலையோர கடைகளில் இட்லி, தோசைக்கு பிரதானமான சட்னியாக பரிமாறப்படுகிறது. இந்த சுவையான சட்னியை செய்வது மிகவும் எளிதானது. இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் கடலை மாவு
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 நறுக்கிய தக்காளி
- அரை கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1/2 ஸ்பூன் பெருங்காயம்
- 1 அங்குல இஞ்சி
- 3 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- 2 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துகொண்டு தண்ணீர்
சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். தண்ணீர் தாராளமாகவே
சேர்க்கலாம். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். இதில் 1 டீஸ்பூன்
கடுகு, ½ டீஸ்பூன் கடலைப் பருப்பு, ½ டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ½
டீஸ்பூன் சீரகம், 2 வர மிளகாய், சில கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு
பெருங்காயம் சேர்க்கவும். இது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- மேலும் 1 இன்ச் இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் உப்பு, ¼
தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை
வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் 1 தக்காளி, 1 கப் தண்ணீர் சேர்த்து
மூடி வைத்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
- இதில் தயார் செய்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு
கலக்கவும்.
- கடலை மாவு கெட்டியாக ஆரம்பித்தவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு
கிளறவும்.
- தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சட்னியின் நிலைத்தன்மையை
சரிசெய்யவும். இந்த சட்னி இறக்கி வைத்ததும் கெட்டியாகி விடுவதால்,
சட்னியின் நிலைத்தன்மைக்காக தண்ணீர் அதிகம் ஊற்றவும்.
- சட்னி நன்கு கொதித்து கெட்டியாக மாறும்வரை காத்திருக்கவும்.
- இப்போது நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சூப்பரான பாம்பே சட்னி ரெடி, இதை பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன்
சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications