Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இட்லி, தோசைக்கு ஏற்ற ஆந்திரா ஸ்டைல் கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Andhra Style Kaara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
ஆனால் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை இந்த கார சட்னியை செய்தால், அடுத்தமுறை இந்த ஸ்டைலில் தான் கார சட்னியை செய்வீர்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* மல்லி - 1/2 ஸ்பூன்
* வேர்க்கடலை - 1 ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* வரமிளகாய் - 5
* பூண்டு - 2 பல்
* தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு, மல்லி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து இறக்கி தனியாக
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளி
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி 1 நிமிடம் வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் வதக்கி
வைத்துள்ளதையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications