Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி... செஞ்சு பாருங்க... காரமும், டேஸ்ட்டும் தாறுமாறா இருக்கும்...!
Andhra Green Chilli Chutney Recipe in Tamil: பொதுவாக ஆந்திரா ஸ்டைல் உணவுகள் என்றாலே காரசாரமாகத்தான் இருக்கும். ஆந்திர உணவுகள் எவ்வளவு காரமாக இருக்கிறதோ அதேயளவிற்கு சுவையானவையும் கூட. ஆந்திராவில் பிரியாணி மட்டுமல்ல பல சுவையான உணவுகள் உள்ளன. ஆந்திராவில் இட்லி, தோசைக்கு பரிமாறப்படும் சட்னிகள் கூட தனித்துவமானதாகவும், காராமானதாகவும் இருக்கும்.
அந்த வகையில் காரமான பச்சை மிளகாய் சட்னி ஒன்று தயாரிக்கப்படுகிறது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதை 1 வாரத்திற்கும் மேல் வைத்து சாப்பிடலாம். இந்த பதிவில் காரமான ஆந்திரா பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கருப்பு உளுந்து
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 300 கிராம் காரமான பச்சை மிளகாய்
- 4 - 5 ஸ்பூன் ஸ்பூன் எண்ணெய்(மிளகாய் வறுக்க)
- 3 - 4 ஸ்பூன் கெட்டியான புளி சாறு
- 1 ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு விதைகள் வெந்தய விதைகளைச் சேர்த்து, வெந்தயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- வறுத்த வெந்தயத்துடன், உளுந்து, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் மென்மையான பொடியாக அரைக்கவும்.
- அதே வாணலியில், எண்ணெயை சூடாக்கி, மிளகாய்களைச் சேர்த்து, அவை மென்மையாக மாறும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- மிக்ஸியில் சமைத்த மிளகாயைச் சேர்த்து, புளிச் சாறு, வெல்லம், உப்பு மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி மூன்று நாட்கள் வெளியேயும், 15 நாட்கள் குளிர்சாதன பெட்டியிலும் கெட்டுப்போகாமல் இருக்கும், தண்ணீர் அதில் படாமல் இருந்தால் போதும்.
- இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம், இல்லையெனில் சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.
- மிக்ஸியில் முதலில் தாளித்த பிறகு மிளகாய்களை அரைக்க வேண்டும். மசாலா பொருட்களை அதனுடன் சேர்த்து அரைக்கக்கூடாது.
- நீங்கள் சட்னியை தாளிக்க விரும்பினால் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து தாளிக்கவும்.



Click it and Unblock the Notifications