Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி... செஞ்சு பாருங்க... காரமும், டேஸ்ட்டும் தாறுமாறா இருக்கும்...!
Andhra Green Chilli Chutney Recipe in Tamil: பொதுவாக ஆந்திரா ஸ்டைல் உணவுகள் என்றாலே காரசாரமாகத்தான் இருக்கும். ஆந்திர உணவுகள் எவ்வளவு காரமாக இருக்கிறதோ அதேயளவிற்கு சுவையானவையும் கூட. ஆந்திராவில் பிரியாணி மட்டுமல்ல பல சுவையான உணவுகள் உள்ளன. ஆந்திராவில் இட்லி, தோசைக்கு பரிமாறப்படும் சட்னிகள் கூட தனித்துவமானதாகவும், காராமானதாகவும் இருக்கும்.
அந்த வகையில் காரமான பச்சை மிளகாய் சட்னி ஒன்று தயாரிக்கப்படுகிறது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதை 1 வாரத்திற்கும் மேல் வைத்து சாப்பிடலாம். இந்த பதிவில் காரமான ஆந்திரா பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கருப்பு உளுந்து
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 300 கிராம் காரமான பச்சை மிளகாய்
- 4 - 5 ஸ்பூன் ஸ்பூன் எண்ணெய்(மிளகாய் வறுக்க)
- 3 - 4 ஸ்பூன் கெட்டியான புளி சாறு
- 1 ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு விதைகள் வெந்தய விதைகளைச் சேர்த்து, வெந்தயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- வறுத்த வெந்தயத்துடன், உளுந்து, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் மென்மையான பொடியாக அரைக்கவும்.
- அதே வாணலியில், எண்ணெயை சூடாக்கி, மிளகாய்களைச் சேர்த்து, அவை மென்மையாக மாறும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- மிக்ஸியில் சமைத்த மிளகாயைச் சேர்த்து, புளிச் சாறு, வெல்லம், உப்பு மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி மூன்று நாட்கள் வெளியேயும், 15 நாட்கள் குளிர்சாதன பெட்டியிலும் கெட்டுப்போகாமல் இருக்கும், தண்ணீர் அதில் படாமல் இருந்தால் போதும்.
- இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம், இல்லையெனில் சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.
- மிக்ஸியில் முதலில் தாளித்த பிறகு மிளகாய்களை அரைக்க வேண்டும். மசாலா பொருட்களை அதனுடன் சேர்த்து அரைக்கக்கூடாது.
- நீங்கள் சட்னியை தாளிக்க விரும்பினால் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து தாளிக்கவும்.



Click it and Unblock the Notifications











