Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ஆலு பிந்தி ரெசிபி
எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி குருமா செய்து போர் அடிக்குதா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் வட இந்தியாவில்செய்யும் ஆலு பிந்தி சப்ஜியை செய்யுங்கள்.
எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி குருமா செய்து போர் அடிக்குதா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் வட இந்தியாவில் சப்பாத்திக்கு செய்யும் ஆலு பிந்தி சப்ஜியை செய்து சுவையுங்கள். ஆலு பிந்தி என்பது வேறொன்றும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் சப்ஜி ஆகும்.

உங்களுக்கு ஆலு பிந்தி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், கீழே அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... பன்னீர் புர்ஜி கிரேவி
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த உருளைக்கிழங்கு (ஆலு) - 1
* வெண்டைக்காய் (பிந்தி) - 10
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 2 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவி, ஒரு துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு, குறைவான தீயில் சுருங்கும் வரை வதக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு நீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பின் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை வெண்டைக்காய் வதக்கிய வாணலிலேயே போட்டு சிறிது நேரம் வதக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* பின்பு அதே வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகவும் வரை வதக்கவும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக நன்கு 2 நிமிடம் வதக்கி, பின் வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி, 3-5 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
* மசாலா வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்குடன் நன்கு ஒன்று சேர்ந்தும் இறுதியில் மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான ஆலு பிந்தி தயார்..!
குறிப்பு:
உங்களிடம் மாங்காய் தூள் இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications