Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
வாயில் வைத்ததும் கரையும் செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Special Aadi Kummayam Recipe In Tamil: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கிழமைகளில் மக்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, பிரசாதத்தை சமைத்து படைத்து வழிபட்டு வருவார்கள்.
பிரசாதம் என்பது நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்து படைப்பது தான். அந்த வகையில் ஆடி மாதத்தில் ஆடி கும்மாயம் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட்டை செய்வதற்கு குறைவான பொருட்களே போதுமானது. இருப்பினும் இது சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த ஸ்வீட்டை ஒருமுறை செய்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வெல்லம்/நாட்டுச்சர்க்கரை - 2 கப்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாகி நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாக வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து, 2 நிமிடம் வறுத்து
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி,
அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து, வெல்லம் கரைந்ததும்,
அதை இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி நெய்யை ஊற்றி
கிளறி, அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு கப் எடுத்து நெய்யுடன் சேர்த்து
2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வெல்ல நீரை ஊற்றி, நீர் வற்றும் வரை வதக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, அதில் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய்யை
ஊற்றி, குறைவான தீயில் வைத்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க
வேண்டும். இப்போது சுவையான ஆடி கும்மாயம் தயார்.



Click it and Unblock the Notifications