Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
பெற்றோர்களே! இந்த நடத்தைகள் மட்டும் உங்களிடம் இருந்தா...அது உங்க குழந்தை வாழ்க்கையை நரகமாக்கிடுமாம்!
குழந்தை பருவம் என்பது மிகவும் அற்புதமானது. பெரியவர்கள் அல்லது இளைஞர்களிடம் இன்று கேட்டாலும், 'குழந்தையாகவே இருந்திருக்கலாம்' என்று கூறுவார்கள். ஏனெனில், குழந்தை பருவம் அவ்வளவு அழகானது. ஒவ்வொரு நபரும் தன் குழந்தை பருவத்தை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்திற்கு தகுதியானவர்கள்தான் என்றாலும், சில குழந்தைகளுக்கு அது கிடைத்திருக்காது. காரணம் அவர்களுடைய பெற்றோர் நடத்தையில் அவர்களின் பெற்றோர் சிறந்தவர்களாக இல்லாமல் இருந்திருக்கலாம். இதுபோன்ற பெற்றோரின் பாணி மற்றும் நடந்துகொள்ளும் விதம் குழந்தைக்கு பயனளிக்காது.

ஒழுங்கற்ற நடத்தை கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படுவது குழந்தையின் ஆளுமையை எதிர்மறையான முறையில் பாதிக்கலாம். ஆதலால், பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஒழுங்கற்ற நடத்தைக் கொண்ட பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே உள்ளன.
எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்
ஒரு குழந்தையாக, நீங்கள் எப்போதும் உங்கள் பெற்றோரைச் சுற்றி மிகவும் கவனமாக இருந்திருப்பீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது வரை அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்கள் பெற்றோர் ஒழுங்கற்ற நடத்தையை கொண்டிருக்கலாம்.
சில சமயங்களில் அவர்கள், மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய நபராக இருக்கலாம். மற்ற நேரங்களில் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமான அல்லது மோசமான நபராக நடந்துகொள்ளலாம்.
உங்கள் பிரச்சனைகளை நிராகரித்தார்கள்
ஒரு குழந்தையாக, உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அந்த பிரச்சனைகளின்போது, உங்கள் பெற்றோரிடமிருந்து ஆதரவையும் இரக்கத்தையும் பெற நீங்கள் அடிக்கடி போராடினீர்கள் எனில், ஒழுங்கற்ற நடத்தை கொண்ட பெற்றோரால் வளர்க்கப்பட்டுள்ளீர்கள்.
இதற்கு உங்கள் பெற்றோர் உங்களுக்கு துணையாக ஒருபோதும் இல்லை என்று அர்த்தமல்ல, ஆனால் உங்களுக்குத் தேவையான ஆதரவை அவர்களால் எப்போதும் உங்களுக்கு வழங்க முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.
அதிக பாதுகாப்புடன் இருப்பது
பள்ளியிலிருந்து சுற்றுல்லா செல்லவோ அல்லது உங்கள் நண்பரின் வீட்டில் இரவு தங்கவோ உங்களை அனுமதிக்கும் போது, உங்கள் பெற்றோர் சாதாரணமாக இருக்கவில்லை எனில், ஒழுக்கமற்ற நடத்தைகளை கொண்ட பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உலகமே பாதுகாப்பற்ற இடம் என்பதை உங்கள் மனதில் அவர்கள் பதிய வைக்க முயல்வார்கள். இதன் விளைவாக நீங்கள் யாரை நம்புவது, யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கலாம். இதனால், மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும்.
அதிக பொறுப்பாக உணர்வது
ஒழுங்கற்ற நடத்தை கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் வயதைக் காட்டிலும் அதிக பொறுப்பாக இருப்பார்கள். தங்கள் பெற்றோரின் உணர்ச்சி நல்வாழ்வை சரிசெய்வதற்கு, தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இது அவர்களின் சிறிய தோள்களுக்கு மிகப்பெரிய சுமையாகும். ஒரு விதத்தில், உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியைக் கவனித்துக்கொள்வதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். இதனால், அதிக சுமையை உங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நீங்கள் பெற வேண்டியிருக்கும்.
கொடூரமாக தண்டிக்கப்பட்டுள்ளீர்கள்
அதிக கோபப்படும் தன்மை உடையவராக உங்கள் பெற்றோர் இருக்கலாம். எதுவுமே நடக்காமல் அவர்கள் அமைதியை இழந்து உங்கள் மீது கோபப்படலாம். மன மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தலை நீங்கள் சந்தித்து இருக்கலாம். மிகவும் இளம் வயதிலேயே உங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதன் வடுக்கள் ஆறாமல் இன்னும் உங்கள் மனதில் இருக்கலாம்.
உங்கள் பெற்றோரின் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியுடன் நீங்கள் இன்னும் போராடுகிறீர்கள் என்றால், ஒரு உளவியலாளரிடம் ஆலோசனை பெறுங்கள். இது உங்கள் மன நலனுக்கானது மற்றும் கடந்த கால கொடுமையிலிருந்து உங்களை வெளிக்கொண்டு வரும். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெற்றோராக மாற திட்டமிட்டால், இந்த விஷயங்கள் உங்களுக்கு பெரிதும் உதவும்.



Click it and Unblock the Notifications

