Just In
- 4 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 4 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 5 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 6 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ப்பிணிகளே! நெஞ்செரிச்சல் இருக்கா? அப்ப தர்பூசணி விதைகளை இப்படி சாப்பிடுங்க..
சாதாரண மக்களைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி விதை அவசியமான ஒன்றாகும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரு தர்பூசணி விதையை சிறு துண்டுகளாக்கி சாப்பிட்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க
தர்பூசணி விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதைகளை தோல் நீக்கிய பின்பு, நன்கு வெய்யிலில் காய வைத்து பின் நெய்யில் வறுத்து, கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சாப்பிட்டு வந்தால், நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். சுமார் 30 கிராம் தர்பூசணி விதைகளில் உத்தேசமாக 158 கலோரி சக்தி உள்ளன. 30 கிராம் எடையில் சுமார் 400 விதைகள் இருக்கும் என்பதால் இதை தேவைக்கேற்ப சாப்பிட்டு வரலாம்.
கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு சட்டென்ற நினைவுக்கு வருவது தர்பூசணி பலம் தான். கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும் தாகத்தை தணிக்கவும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. குளிர்ச்சி தரும் பழவகைகள், இளநீர், பதநீர், தயிர், மோர் என பல இருந்தாலும், பார்த்த இடத்தில் எல்லாம் எளிதாக கிடைப்பது தர்பூசணிப் பழம் மட்டும் தான்.
MOST READ: உடல் எடை குறையணுமா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...
மற்ற பழங்களில் எல்லாம் நீர்ச்சத்து என்பது முப்பது சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தர்பூசணி பழத்தில் மட்டும் தான் 90 சதவிகிதம் வரை நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மீதம் உள்ளதில் ஐந்து சதவிகிதம் விதைகளும் ஐந்து சதவிகிதம் தோலும் உள்ளன. இதனால் தான் கிராமப்புறங்களில் இப்பழத்தை தண்ணீர் பழம் என்றழைக்கின்றனர்.
MOST READ: கொரோனா குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள வேண்டியது அவசியம் தானா?
தர்பூசணி
நம்மில் பெரும்பாலானவர்கள், தர்பூசணிப் பழத்தை வாங்கினால், பழத்தை உண்டுவிட்டு, அதில் உள்ள விதைகளை தூக்கி தூற வீசிவிடுகின்றனர். காரணம் தர்பூசணிப் பழத்தின் விதைகளின் நிறமும், அதன் வாசனையும் தான். இதனால் தான் சிலர் தர்பூசணி பழத்தையே அறுவறுப்பாக பார்க்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த விதைகளில் தான் நம்முடைய ஆரோக்கியத்துக்கு உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்கும் தெரியாது.
என்னென்ன சத்துக்கள்
தர்பூசணி விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதைகளை தோல் நீக்கிய பின்பு, நன்கு வெய்யிலில் காய வைத்து பின் நெய்யில் வறுத்து, கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சாப்பிட்டு வந்தால், நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். சுமார் 30 கிராம் தர்பூசணி விதைகளில் உத்தேசமாக 158 கலோரி சக்தி உள்ளன. 30 கிராம் எடையில் சுமார் 400 விதைகள் இருக்கும் என்பதால் இதை தேவைக்கேற்ப சாப்பிட்டு வரலாம். அதோடு, ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதைகளில் சுமார் 21 மில்லி கிராம் மெக்னீசியம் சத்துக்களும் அர்ஜினைன் என்னும் வேதிப்பொருளும் அடங்கயுள்ளன.
இரும்பு சத்து அதிகம்
நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் மெக்னீசியம் முக்கிய பங்காற்றுவதோடு, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தர்பூசணி விதைகளில் 0.29 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோக்ளோபினுக்கு இரும்புச் சத்து முக்கிய காரணியாக உள்ளது. இரும்புச் சத்தானது நமது உடம்பில் உள்ள கலோரிகளை ஆக்க சக்திகளாக மாற்றி அவற்றை பயன்படுத்துகிறது. இதயம் பலவீனமானவர்கள் தர்பூசணி விதைகளை நீரில் நன்கு கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் இதயம் பலமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கர்ப்பிணிகளுக்கு அவசியம்
வைட்டமின் பி-9 ஆகியவை மூளையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தர்பூசணி விதைகளில் அதிக அளவில் உள்ளன. இது சாதாரண மக்களைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான ஒன்றாகும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரு தர்பூசணி விதையை சிறு துண்டுகளாக்கி சாப்பிட்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தர்பூசணி விதைகளை வெய்யிலில் காயவைத்து வறுத்து சாப்பிடலாம். மேலும் தர்பூசணி விதைகளோடு, சிறிது வெல்லம் சேர்த்து தர்பீஸ் பர்பி செய்து சாப்பிடலாம்.
கண் பிரச்சினை தீரும்
கண் அழுத்த நோய் உள்ளவர்கள், மாலைக்கண் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து தர்பூசணி பழத்தையும், விதைகளையும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடுகள் நீங்கும். தர்பூசணி விதையில் உள்ள அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமிலோ அமிலங்கள், வலிமையான எலும்பு மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது மனித உடலின் சீரான செயல்பாட்டுக்கு உதவுவதோடு எலும்புகள் மற்றும் திசுக்களின் வலிமையை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் பி6, நியாசின், ஃபோலேட், தயமின் போன்ற சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. இது நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.