Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பிரசவத்தின் போது ஆண்களின் விரைகளை கயிற்றால் கட்டி இழுக்கும் சடங்கு! இந்த கொடுமைய நீங்களே பாருங்க...
உலகம் முழுக்க பல தரப்பட்ட கலாச்சாரங்கள் எப்போதுமே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சில கலாச்சாரங்கள் அமைதியான முறையில் நடக்கிறது என்றால், சில கலாச்சாரங்கள் இரத்தம் தெறிக்கும் வகையிலே இன்றும் நடந்து வருகிறது. அதுவும் இந்தியாவை பூர்வீகமாக வைத்துள்ள சில பழங்குடி இனத்தவர்கள், இது போன்ற கலாச்சாரங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதுவும் தனது துணைவியரின் பிரசவத்தின் போது ஆண்களின் விரைகளில் கயிற்றை கட்டி இழுக்க கூடிய மிக கொடூரமான முறையை பின்பற்றி வருகின்றனர். இதை கேட்கும் போதே பல ஆண்களுக்கு உடல் கூச தொடங்கி இருக்கும். சாதாரணமாக, ஆண்கள் பிறப்புறுப்பில் இடித்து கொண்டே உயிர் போகும் அளவிற்கு மரண வலி ஏற்படும்.
இது நமக்கு இப்படி தான் நடக்க போகிறது என தெரிந்து கொண்டே இந்த சடங்கை செய்ய முற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே எண்ணி கொள்ளுங்கள். இப்படிப்பட்ட சடங்கு எதற்காக, எங்கு, எப்படிப்பட்ட முறையில் நடக்கிறது... போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழங்குடி மக்கள்!
நமது இன்றைய கலாச்சாரங்கள் பலவும் மூட நம்பிக்கை மிக்கதாக இருந்து வருகிறது. தற்போது உள்ள மாதவிடாய் பற்றிய சடங்குகள், பெண்களை பற்றிய சடங்குகள், திருமண சடங்குகள், குழந்தை பிறப்பு சடங்குகள் போன்றவை இன்றைய கால கட்டத்தில் தவறான சடங்குகளாக மக்கள் கருதுகின்றனர்.
இதை பற்றிய புரிதலே பல நூற்றாண்டுகளுக்கு பின் இன்று தான் நமக்கு ஏற்படுகிறது. இது இப்படி இருக்க, இந்த பழங்குடி மக்களின் சடங்குகளை பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

யார் இவர்கள்?
பலவித பழங்குடி இனங்கள் உலகளவில் உள்ளன. அவர்களில் இந்த ஹியூச்சோல் பழங்குடி மக்களும் அடங்குவர். இவர்களை ஹியூச்சோல் இந்தியர்கள் (Huichol Indians ) என்றே அழைக்கபடுகின்றனர்.
இவர்கள் மெக்ஸிகோஸின் மத்திய வடக்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பல்வேறு சடங்குகள் இன்றளவும் உலக அளவில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

சித்திரம்- விசித்திரம்!
இவர்களை பற்றி ஆய்வு செய்ததில் தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி அனைவரின் கவனத்திற்கும் வந்துள்ளது. அதாவது, இவர்கள் வரைந்த ஓவியத்தை ஆய்வு செய்த போது மிகவும் விசித்திரமான முறையில் இருந்தது. அதில் பிரசவம் பற்றிய ஓவியம் தான் பேசு பொருளாக மாறி உள்ளது.

பிரசவமும் ஆணும்..!
அந்த ஓவியத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது போன்றும். அதிலிருந்து குழந்தைகள் வெளி வருவது போன்றும் இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இதில் ஆணும் இடம் பெற்றிருப்பதே.
அதாவது, பெண்ணிற்கு பிரசவ வலி எடுக்க தொடங்கிய உடன் ஆண்களை ஒரு வித ஹியூச்சோல் பழங்குடி இனத்தவர்களின் சடங்கிற்கு தயாராக செய்வார்களாம்.

அவஸ்தை..!
இந்த சடங்கில் பெண் பிரசவ வலியை பொறுக்க முடியாத போது ஆண்களின் விரைகளில் கயிற்றை கட்டி, அதை இழுக்கும் படி செய்வார்களாம். இந்த சடங்கை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களே அதிர்ந்து போய்தான் இருப்பார்கள். அதன் பின் இதற்கான உண்மை காரணத்தை ஆய்வு செய்ய தொடங்கினர்.

ஏன் இப்படி?
இப்படி பட்ட சடங்கை ஹியூச்சோல் இந்தியர்கள் கடைபிடித்து வர சில முக்கிய காரணிகள் உள்ளது என அவர்களே கூறுகின்றனர். ஒரு பெண்ணின் பிரசவ வலியானது 100-க்கும் மேற்பட்ட எலும்புகளை உடைக்கும் போது ஏற்பட கூடிய வலியை விட அதிகமாக இருக்கும்.

எப்படி அந்த பெண் இந்த வலியை உணர்கிறாளோ அதற்கு சமமான வலியை ஆணும் உணர வேண்டும் என்கிற நோக்கில் தான், இந்த சடங்கை ஹியூச்சோல் பழங்குடி இனத்தவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

வலி!
எப்படி அந்த பெண் இந்த வலியை உணர்கிறாளோ அதற்கு சமமான வலியை ஆணும் உணர வேண்டும் என்கிற நோக்கில் தான், இந்த சடங்கை ஹியூச்சோல் பழங்குடி இனத்தவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஆண்களின் உணர்வு!
பிரசவ நேரத்தில் ஆண்களுக்கு செய்யப்படுகின்ற இப்படிப்பட்ட சடங்கை ஆண்கள் எதிர் கொள்ளும் போது அதிக மன அழுத்திற்கு ஆளாகின்றனர் என்றும், இதனால் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சடங்கினால் ஒரு முறை ஏற்பட்ட அனுபவம் காலம் முழுக்க மாறாது எனவும் கூறுகின்றனர்.

சரியல்ல!
பெண்ணின் பிரசவ வலி என்பது அவளின் உடல் ரீதியாக இயற்கையாகவே நடைபெற கூடிய நிகழ்வு. ஆனால், இது போன்று ஆண்களின் விரைகளில் கயிற்றை கட்டி இழுப்பது மிகவும் மோசமான சடங்காகவே கருதப்படுகிறது.
ஆண்களை காயப்படுத்தினால் பெண்களின் உணர்வை புரிந்து கொள்ள இயலும் என்பது முட்டாள்தனமான ஒன்றாக தான் கருதப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள்..!
ஆணும் பெண்ணும் சமம் என்கிற ஒற்றை கருத்தை இங்குள்ள அனைவரும் புரிந்து கொண்டாலே போதும். இதற்காக இது போன்ற சடங்குகளின் மூலமாக செயற்கையான முறையில் வலியை உண்டாக்கி ஆண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குவது சரியல்லஎன சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

யாராக இருந்தாலும் மனித நேயமற்ற செயல்களை செய்வது எந்த காலத்திலும் ஏற்று கொள்ள கூடியதல்ல. வலியை தந்து விடியலை எதிர்ப்பார்ப்பது நியாயமும் இல்லை. இது உணர்ச்சியின் ரீதியாகவும், புரிதலின் அடிப்படையிலும் உண்டாக கூடியே ஒன்றே. இதை ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொண்டாலே சிறப்பு.

உணர்ச்சி!
யாராக இருந்தாலும் மனித நேயமற்ற செயல்களை செய்வது எந்த காலத்திலும் ஏற்று கொள்ள கூடியதல்ல. வலியை தந்து விடியலை எதிர்ப்பார்ப்பது நியாயமும் இல்லை. இது உணர்ச்சியின் ரீதியாகவும், புரிதலின் அடிப்படையிலும் உண்டாக கூடியே ஒன்றே.
இதை ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொண்டாலே சிறப்பு.



Click it and Unblock the Notifications











