Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பிரசவ வலியா? உடனே தயாராகுங்கள்!

மாற்றுத்துணிகள்
பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் கொடுக்கப்படும் யூனிபார்ம் நைட்டியைத்தான் போடவேண்டும். எனவே மாற்றுத்துணியாக இரண்டு செட் துணிகளை எடுத்துக்கொண்டு போனால் நல்லது. மேலும் பிரசவகாலத்தில் காட்டன் துணிகளையே அதிகம் உபயோகப்படுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சுத்தமான உள்ளாடைகள்
பிரசவ காலத்தில் சுத்தமான உள்ளாடைகளை உபயோகிக்க வேண்டும். பேண்டீஸ் புதியவையாக இருக்கவேண்டும். அதுதான் கருப்பைக்கும் பாதுகாப்பானது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
அதேபோல் அதீத ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் 30 அளவுள்ள காட்டன் சானிடர் நாப்கின் பையில் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
மனதிற்கு இதமான புத்தகங்கள்
பிரசவ காலத்தில் ஒருவாரம் வரை மருத்துவமனையில் தங்க நேரிடலாம். ஒரு சிலருக்கு வலி வருவதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். எனவே அந்த நேரத்தில் அழகான புத்தகங்களை படிக்கலாம், மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம். இதனால் டென்சன் இல்லாமல் பிரசவம் ஏற்படும் என்கின்றனர்.
சுடுநீர் பை
குழந்தை பிறந்த பின்னர் சுடுநீர் பையினால் ஒத்தடம் கொடுக்கவேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த பை கொடுக்கமாட்டார்கள். எனவே சுடுநீர் பையினை தனியாக எடுத்துக்கொண்டு போவது நல்லது.
மென்மையான துணிகள்
சுத்தமான காட்டன் துணிகளை எடுத்துச் செல்லவேண்டியது அவசியம். குழந்தை பிறந்த பின்னர் மென்மையான துணிகளை விரித்து குழந்தைகளை படுக்கவைக்க வேண்டும். எனவே குழந்தையின் சருமத்தினை பாதுகாக்கும் வகையில் உங்கள் பிரசவ பையில் மென்மையான துணிகளை எடுத்துவைக்கவும்.
பால் சங்கு அவசியம்
சுகப்பிரசவமோ, சிசேரியனோ கண்டிப்பாக பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வேண்டும். இருப்பினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் பால் சங்கு மூலம் குழந்தைகளுக்கு சுடுநீர், பால் போன்றவைகளை சங்கு மூலம் புகட்டலாம்.
இதுபோன்ற அத்தியாவசியமான பொருட்களை உங்கள் பைகளில் எடுத்து பத்திர படுத்தி வைத்துக்கொண்டால் பிரசவ காலத்தில் தேவையில்லாத டென்சன் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications