Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
பிரசவ வலியா? உடனே தயாராகுங்கள்!

மாற்றுத்துணிகள்
பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் கொடுக்கப்படும் யூனிபார்ம் நைட்டியைத்தான் போடவேண்டும். எனவே மாற்றுத்துணியாக இரண்டு செட் துணிகளை எடுத்துக்கொண்டு போனால் நல்லது. மேலும் பிரசவகாலத்தில் காட்டன் துணிகளையே அதிகம் உபயோகப்படுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சுத்தமான உள்ளாடைகள்
பிரசவ காலத்தில் சுத்தமான உள்ளாடைகளை உபயோகிக்க வேண்டும். பேண்டீஸ் புதியவையாக இருக்கவேண்டும். அதுதான் கருப்பைக்கும் பாதுகாப்பானது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
அதேபோல் அதீத ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் 30 அளவுள்ள காட்டன் சானிடர் நாப்கின் பையில் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
மனதிற்கு இதமான புத்தகங்கள்
பிரசவ காலத்தில் ஒருவாரம் வரை மருத்துவமனையில் தங்க நேரிடலாம். ஒரு சிலருக்கு வலி வருவதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். எனவே அந்த நேரத்தில் அழகான புத்தகங்களை படிக்கலாம், மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம். இதனால் டென்சன் இல்லாமல் பிரசவம் ஏற்படும் என்கின்றனர்.
சுடுநீர் பை
குழந்தை பிறந்த பின்னர் சுடுநீர் பையினால் ஒத்தடம் கொடுக்கவேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த பை கொடுக்கமாட்டார்கள். எனவே சுடுநீர் பையினை தனியாக எடுத்துக்கொண்டு போவது நல்லது.
மென்மையான துணிகள்
சுத்தமான காட்டன் துணிகளை எடுத்துச் செல்லவேண்டியது அவசியம். குழந்தை பிறந்த பின்னர் மென்மையான துணிகளை விரித்து குழந்தைகளை படுக்கவைக்க வேண்டும். எனவே குழந்தையின் சருமத்தினை பாதுகாக்கும் வகையில் உங்கள் பிரசவ பையில் மென்மையான துணிகளை எடுத்துவைக்கவும்.
பால் சங்கு அவசியம்
சுகப்பிரசவமோ, சிசேரியனோ கண்டிப்பாக பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வேண்டும். இருப்பினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் பால் சங்கு மூலம் குழந்தைகளுக்கு சுடுநீர், பால் போன்றவைகளை சங்கு மூலம் புகட்டலாம்.
இதுபோன்ற அத்தியாவசியமான பொருட்களை உங்கள் பைகளில் எடுத்து பத்திர படுத்தி வைத்துக்கொண்டால் பிரசவ காலத்தில் தேவையில்லாத டென்சன் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











