Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
பெற்றோர்களே! உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா? நீங்க உங்க குழந்தைக்கு நல்ல பெற்றோரா இல்லையாம்!
கீழ்ப்படிந்து நடக்கும் குழந்தையைப் பெற்றிருப்பது விஷயங்களை எளிதாக்குகிறது. ஆனால் எல்லா தவறான காரணங்களுக்காகவும் கீழ்ப்படிதலைக் கோருவது சரியான பெற்றோரின் அணுகுமுறையாக இருக்காது
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில், பிள்ளைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கையாள வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். சிலர் மிகவும் மென்மையாகவும் புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கும்போது, மற்றவர்கள் கண்டிப்பான ஒழுக்கம் உடையவர்களாகவும் மிகவும் கட்டுப்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இந்த இரண்டு குழந்தை வளர்ப்பு முறைகளும் நல்ல நடத்தை கொண்ட, கீழ்ப்படிதலுள்ள குழந்தைகளை வளர்க்க உதவும். இருப்பினும், இவை அனைத்தும் நீங்கள் பின்பற்றும் பெற்றோரின் உத்திகள் மற்றும் தந்திரோபாயங்களைப் பொறுத்தது.

சில சமயங்களில், பெற்றோர்கள் ஆக்ரோஷமாகவோ முரட்டுத்தனமாகவோ மாறலாம். இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இருக்கலாம். நீங்கள் எந்த பெற்றோராக இருப்பீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினால், கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒழுங்குபடுத்தும் முறையாக மிரட்டுவது
பெற்றோர்கள் குழந்தைகளிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். இதில் ஆதிக்கம் மற்றும் மிரட்டல் இருக்கக்கூடாது. நீங்கள் அவ்வாறு மிரட்டும் பெற்றோராக இருந்தால், எப்போது சிந்தித்து அவற்றை கைவிட வேண்டும். தண்டனை, மிரட்டல், அழுத்தம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை உங்கள் பிள்ளையைக் கீழ்ப்படியச் செய்யலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு, இது உங்கள் குழந்தையின் மனதையும், அவர்களின் நம்பிக்கையையும் பாதிக்கலாம் மற்றும் அவர்களின் நடத்தையையும் பாதிக்கலாம்.

நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைத்தல்
ஒரு பெற்றோராக, கண்டிப்பாக உங்கள் குழந்தையிடம் இருந்து சில எதிர்பார்ப்புகளை நீங்கள் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் அதிகமாக எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டுமா? என்றால் இல்லை. நம்பத்தகாத, நியாயமற்ற எதிர்பார்ப்புகளை அமைப்பது ஒரு கட்டத்தில் உங்களை ஏமாற்றமடையச் செய்வது மட்டுமல்லாமல், அது உங்கள் பிள்ளைக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கலாம் மற்றும் அவர்களின் ஆளுமையை பாதிக்கலாம்.

குருட்டுத்தனமான கீழ்ப்படிதலைக் கோருதல்
கீழ்ப்படிந்து நடக்கும் குழந்தையைப் பெற்றிருப்பது விஷயங்களை எளிதாக்குகிறது. ஆனால் எல்லா தவறான காரணங்களுக்காகவும் கீழ்ப்படிதலைக் கோருவது சரியான பெற்றோரின் அணுகுமுறையாக இருக்காது. இது உங்கள் குழந்தையை மக்களை மகிழ்விப்பவராக மாற்றுவது மட்டுமல்லாமல், அது அவர்களின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், அவர்களின் முடிவெடுக்கும் திறன்களைப் பாதிக்கிறது.

கவனிக்கப்படாத உணர்ச்சிகள்
முரட்டுத்தனமான பெற்றோர்கள் உளவியல் ரீதியாகவும் இருக்கலாம். உங்கள் குழந்தையிடம் இருந்து நீங்கள் நிறையக் கோரலாம். ஆனால் அதே நேரத்தில், அவர்களின் உணர்ச்சிகளை நீங்கள் சரிபார்க்கவோ அல்லது அங்கீகரிக்கவோ தவறிவிடுவீர்கள். உங்கள் சொந்த கோரிக்கைகள் மற்றும் தேவைகளில் நீங்கள் மிகவும் மூழ்கிவிடுகிறீர்கள். உங்கள் குழந்தையின் சொந்த உணர்ச்சித் தேவைகள் மற்றும் விருப்பங்களை உங்களால் பார்க்கவோ அல்லது அங்கீகரிக்கவோ முடியாது. இது குழந்தையை மனதை கணிசமாக பாதிக்கலாம்.

ஒருதலைப்பட்ச தொடர்பு
ஆக்ரோஷமான பெற்றோர்கள் வரையறுக்கப்பட்ட தகவல்தொடர்பு மூலம் வகைப்படுத்தலாம். நீங்கள் உங்கள் குழந்தையுடன் ஒரு உரையாடலை மேற்கொள்ளலாம். ஆனால், அதில் நீங்கள் வெறும் சொல்பவராகவோ அல்லது கேட்பவராகவோ மட்டும் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஆரோக்கியமான தகவல்தொடர்பு இரண்டு வழிகளில் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பிள்ளையைக் கேட்க வேண்டும், மேலும் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அவர்களுக்கு வழிகாட்டவும் வேண்டும். குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துவதை நிறுத்துவது நச்சு மற்றும் ஆக்ரோஷமான பெற்றோரின் அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications











