Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
சமைக்காத அரிசி சாப்பிடும் குழந்தைக்கு சத்து குறைபாடு வரும்!

அனீமியா வரும்
அரிசியின் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் அதனை சாப்பிடத் தொடங்குகின்றனர். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அனீமியா ஏற்படுவதோடு ஆரோக்கிய குறைபாட்டினை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால் மஞ்சள் காமாலை வரும் என்றும் சில பெற்றோர் அச்சப்படுகின்றனர். ஆனால் இதில் உண்மையில்லை. அதேசமயம் அரிசியை மெல்லுவதால் பல சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். எப்போது அரிசியை மென்று கொண்டிருந்தால் பசி குறைந்துவிடும். வேறு உணவுகளைச் சாப்பிடப் பிடிக்காது.
அரிசியை சாப்பிடுவது பற்களுக்கு பாதுகாப்பானதல்ல. அதேபோல் வயிறுக்கு ஏற்றதல்ல. அரிசியில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. இதனால் ரத்த சோகை, பார்வைக் குறைபாடு, தோல் நோய்கள், புரதச் சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறை நோய்கள் என்று பல நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளையே பழக்கப்படுத்த வேண்டும். சமைக்கும் போது அரிசியை எடுத்து வாயில் போடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தால் அதை பார்க்கும் குழந்தைகளுக்கும் அரிசியை எடுத்து சாப்பிடுகின்றனர். எனவே பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications