Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
சமைக்காத அரிசி சாப்பிடும் குழந்தைக்கு சத்து குறைபாடு வரும்!

அனீமியா வரும்
அரிசியின் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் அதனை சாப்பிடத் தொடங்குகின்றனர். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அனீமியா ஏற்படுவதோடு ஆரோக்கிய குறைபாட்டினை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால் மஞ்சள் காமாலை வரும் என்றும் சில பெற்றோர் அச்சப்படுகின்றனர். ஆனால் இதில் உண்மையில்லை. அதேசமயம் அரிசியை மெல்லுவதால் பல சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். எப்போது அரிசியை மென்று கொண்டிருந்தால் பசி குறைந்துவிடும். வேறு உணவுகளைச் சாப்பிடப் பிடிக்காது.
அரிசியை சாப்பிடுவது பற்களுக்கு பாதுகாப்பானதல்ல. அதேபோல் வயிறுக்கு ஏற்றதல்ல. அரிசியில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. இதனால் ரத்த சோகை, பார்வைக் குறைபாடு, தோல் நோய்கள், புரதச் சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறை நோய்கள் என்று பல நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளையே பழக்கப்படுத்த வேண்டும். சமைக்கும் போது அரிசியை எடுத்து வாயில் போடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தால் அதை பார்க்கும் குழந்தைகளுக்கும் அரிசியை எடுத்து சாப்பிடுகின்றனர். எனவே பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications











