Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
சமைக்காத அரிசி சாப்பிடும் குழந்தைக்கு சத்து குறைபாடு வரும்!

அனீமியா வரும்
அரிசியின் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் அதனை சாப்பிடத் தொடங்குகின்றனர். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அனீமியா ஏற்படுவதோடு ஆரோக்கிய குறைபாட்டினை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால் மஞ்சள் காமாலை வரும் என்றும் சில பெற்றோர் அச்சப்படுகின்றனர். ஆனால் இதில் உண்மையில்லை. அதேசமயம் அரிசியை மெல்லுவதால் பல சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். எப்போது அரிசியை மென்று கொண்டிருந்தால் பசி குறைந்துவிடும். வேறு உணவுகளைச் சாப்பிடப் பிடிக்காது.
அரிசியை சாப்பிடுவது பற்களுக்கு பாதுகாப்பானதல்ல. அதேபோல் வயிறுக்கு ஏற்றதல்ல. அரிசியில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. இதனால் ரத்த சோகை, பார்வைக் குறைபாடு, தோல் நோய்கள், புரதச் சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறை நோய்கள் என்று பல நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளையே பழக்கப்படுத்த வேண்டும். சமைக்கும் போது அரிசியை எடுத்து வாயில் போடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தால் அதை பார்க்கும் குழந்தைகளுக்கும் அரிசியை எடுத்து சாப்பிடுகின்றனர். எனவே பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications