Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!!

எவ்வளவு உண்ண வேண்டும்?
வர்த்தக நிர்ணய நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு வயதான குழந்தைகளின் உடலில் தினமும் 1 கிராமிற்கு குறைவான அளவே உப்பை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 2 கிராமும், 4-6 வயதான குழந்தைகளுக்கு 3 கிராமும் தான் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் 7-10 வயதான குழந்தைகளுக்கு 5 கிராம் தான் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் அதேப்போல் பால், சாப்பாடு மற்றும் காய்கறிகளிலும் சோடியங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றில் உடலுக்குத் தேவையான அளவே இருக்கின்றன.ஆகவே குழந்தைகள் மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பவர்கள் என்றால், அவர்களுக்கு அதனை எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அந்த அளவு கொடுக்க வேண்டும். முடிந்த வரை உணவில் சுவைக்காக அதிக அளவு உப்பு சேர்ப்பதை குறைத்துவிடுங்கள். இல்லையென்றால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
உப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு பலவிதமான நோய்கள் வரும். சில சமயங்களில் சிறுநீரகம் பழுதடைகிறது என்றால், அதற்கு காரணம் அளவுக்கு அதிகமான அளவு உப்பு கலந்த உணவுகளை உண்பதாலேயே ஆகும். ஏனெனில் அதிகமான அளவு சோடியம் சேர்ந்தால், சிறுநீரகங்களால் அதனை முற்றிலும் வெளியேற்ற முடியாமல், அந்த சோடியம் சிறுநீரகங்களிலேயே தங்கிவிடும். இதனால் சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதோடு, மனஅழுத்தமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா, சிறுநீரகக் கல், உடல் பருமன் போன்றவையும் ஏற்படக்கூடும்.
ஆகவே குழந்தைகளுக்கு அதிக அளவு உப்பு கலந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அதுவும் 1 வயது கூட ஆகாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப் பாலே சிறந்தது. இதிலேயே குழந்தைகளின் உடலுக்குத் தேவையான உப்பு கிடைத்துவிடும். மேலும் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுப்பதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே அவர்களுக்கு தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுக்க வேண்டும். அதற்காக உப்புகளையே சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை, சரியான அளவுகளே சாப்பிட வேண்டும். ஏனெனில் சோடியமும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது தான், ஆனால் அது குறைந்த அளவில் தான் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications