Latest Updates
-
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கொரோனா வைரஸ் - கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமாக இருங்க...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த கொரோனா தாக்குதலில் இருந்து நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் பலரது உயிரை குடித்து வருகிறது. நோயாளிகளையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் நாம் சமைத்து சாப்பிடும் உணவுகள் சுத்தமானதாக இருக்கிறதா என்று பார்த்து சாப்பிடுங்கள். முக்கியமாக கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதுகாப்பான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சனி தொந்தரவில் ஆரம்பித்து மூச்சை நிறுத்தும் நோயாக மாறி விடுகிறது கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் வடிவத்தை பார்த்தால் சூரிய கதிர் வீச்சை போலவே இருக்கிறது. சூரியனை பார்க்கும் போது தெரியும் கதிர்வீச்சு போல இந்த கொரோனா வைரஸ் தெரிகிறது. சூரியனுக்கு நிகரானது இந்த வைரஸ் பல இடங்களில் பற்றி பரவுகிறது.
கொரோனா வைரஸ் 10 ஆயிரம் வருடத்திற்கு முன்பே வன விலங்குகளை தாக்கியிருக்கிறதாம். உலகத்தில் ஆறு வகையான வைரஸ் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது ஏழாவது வகையான வைரஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த இந்த வைரஸ் வன விலங்குகளையும் பாலூட்டிகள், பறவைகளை தாக்கியுள்ளது. வுகானில் பற்றி இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

ஏழாவது வைரஸ் கொரோனா
சீனாவில் உள்ள வன விலங்குகள் மாமிசங்கள் விற்கும் சந்தையில் இருந்து பரவியிருக்கிறது என்று சொன்னாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் என அனைத்தையும் கபளீகரம் செய்கிறது இந்த வைரஸ். கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வைரஸ்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது ஏழாவது விதமான வைரஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பீதி
இந்த வைரசுக்கு நாவல் கொரோனா வைரஸ் பெயர் வைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் சாதாரண சளி காய்ச்சல் என்று ஆரம்பிக்கிறது. உடம்பிற்குள் புகும் வைரஸ் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. தொண்டையை பாதிப்பு சுவாசப்பிரச்சினையை தருகிறது. வயதானவர்கள், இதயநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பற்றி பரவுகிறது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

காற்றில் பரவும் நோய்கள்
கர்ப்பிணிகளை எந்த நோயும் எளிதாக தாக்கும். சின்னம்மை, சர்க்கரை நோய் போன்றவை எளிதில் பாதிக்கும். எனவே தான் கர்ப்ப காலத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசப்பிரச்சினைக்கு ஆளாகின்றனர். காற்றில் இந்த வைரஸ் 24 மணிநேரம் உயிரோட இருக்குமாம். காற்றின் மூலம் இந்த வைரஸ் யாரை எப்போது தாக்கும் என்று தெரியாது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள் முகத்தை மூடி மாஸ்க் போட்டுக்கொள்வது அவசியம்.

நோய்களும் மருந்தும்
சீனாவில் பல லட்சக்கணக்கான மக்கள் இப்போது முடங்கிப் போய் இருக்கிறார்கள். காரணம் இந்த நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் சிக்கன் பாக்ஸ், அம்மை நோய், போலியோ நோய் சிக்கன் குனியா, பன்றிக்காய்ச்சல் என பல நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு குணப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதே போல சளி காய்ச்சல் சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த நோய்க்கும் நம்ம ஊர் சித்த மருத்துவத்தில் கண்டிப்பாக மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பலாம்.

சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள்
இந்த கொரோனா நோய் கோழிகளை எளிதாக தாக்குகிறது. எனவே சுகாதாரமான முறையில் கோழிகளை சரியாக சமைத்து சாப்பிட வேண்டும். சுகாதாரமானமுறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இந்த நோய் பற்றிய அச்சம் நீங்கும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

கைகளை கழுவுங்கள்
சாப்பிடும் முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கைகளை கழுவுங்கள், ஹோட்டலில் சாப்பிடப்போனால் அங்கே சரியான முறையில் சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என பாருங்கள். வீட்டில் சாப்பிடும் தட்டுக்களை நன்றாக கழுவுங்கள். வீட்டு சாப்பாடுகளை சரியாக சமைத்து சாப்பிடுங்கள். குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்களை தவிர்த்து விடுங்கள். நீங்களாக சளி, இருமல் பாதிப்பிற்கு ஆளாக வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications