Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆனான் - கற்பழிப்பு வழக்கில் பரபரப்பு!
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆன சம்பவம், கேரளாவில் பரபரப்பு!
காலையில் எழுந்ததும் டிவியில், நாளிதழில் ஏதோ இராசிபலன் பார்ப்பது போல தினந்தோறும் கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் செய்திகளில் வந்தவண்ணமே உள்ளன.
பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டுமல்ல, பாதிப்பை உண்டாக்கும் ஆண்கள் மத்தியிலும் கூட வயது வரம்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று வயது குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர்.
இச்சை என்றால் என்ன என்று தெரியாத, பதின் வயதை கூட எட்டாத ஒரு 12 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்து, அப்பா ஸ்தானம் அடைகிறான் என்றால்... நமது சமூகம் எதை நோக்கி செல்கிறது என்பதை சிந்திக்கவே அச்சமாக உள்ளது.

கேரளா!
கொச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், 17 வயது பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தையான சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்ற நவம்பர்!
12 வயது நிரம்பிய அந்த சிறுவன் சென்ற நவம்பர் மாதம் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

பெண் குழந்தை!
மரபணு பரிசோதனையில், பிறந்த பெண் குழந்தையின் தந்தை அந்த 12 வயது சிறுவன் தான் என தெரியவந்துள்ளது. அந்த பெண் கூறிய பிறகு தான் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் சீர்திருத்த பள்ளி!
சிறுவனின் வயதை கருதி வழக்கு நீதி வாரியத்தின் கீழ் நடக்கவுள்ளது. மேலும், சிறுவன் இப்போது ஜாமீனில் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் இப்படி?
கற்பழிப்பு சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்ற போதிலும், இது போன்ற விசித்திர வழக்குகள் இன்று அதிகமாகி வருகிறது. பதின் வயதை கூட எட்டிடாத ஒரு சிறுவன் கற்பழித்தது மட்டுமின்றி, 12 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆகியுள்ளான் என்பது பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் என்ன?
இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? கற்பழிப்பு வழக்குகளில் சிக்குபவர்களுக்கு என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகிறது என்ற அச்சமின்மையா? ஊடகங்கள், சினிமாக்கள் கற்பழிப்பு என்பதை அதிகம் கவனம் செலுத்தி வெளிச்சமிட்டு காட்டும் பிம்பமா?

பெற்றோரும், சமூகமும்!
இந்த வயதில் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த செயல்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கற்பிக்க பெற்றோருக்கு நேரமில்லை. தாத்தா, பாட்டி உறவும் இல்லை.
தன் குழந்தையையே சரியாக வளர்க்க நேரம் இல்லாமல் வாழும் இவர்கள், சமூகத்தில் வளரும் குழந்தையின் நலன் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவார்களா என்ன?

முந்தைய தலைமுறை!
முந்தைய தலைமுறையில், நாலு தெரு தள்ளி குடியிருக்கும் குழந்தைகள் கூட, யாருடைய பிள்ளை, அவரது குடும்பம் என்ன என்ற விவரம் தெரியும். எனவே, அவனை வேறு இடத்தில் கண்டால் கூட அதட்டி வீட்டுக்கு அனுப்புவர். ஆனால், இன்றோ, பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.
இப்படிப்பட்ட சமூக மாற்றமும், பெற்றோர் வளர்ப்பு தவறுகளும் தான் இது போன்ற தவறுகள் சமூகத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.



Click it and Unblock the Notifications