Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆனான் - கற்பழிப்பு வழக்கில் பரபரப்பு!
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆன சம்பவம், கேரளாவில் பரபரப்பு!
காலையில் எழுந்ததும் டிவியில், நாளிதழில் ஏதோ இராசிபலன் பார்ப்பது போல தினந்தோறும் கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் செய்திகளில் வந்தவண்ணமே உள்ளன.
பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டுமல்ல, பாதிப்பை உண்டாக்கும் ஆண்கள் மத்தியிலும் கூட வயது வரம்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று வயது குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர்.
இச்சை என்றால் என்ன என்று தெரியாத, பதின் வயதை கூட எட்டாத ஒரு 12 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்து, அப்பா ஸ்தானம் அடைகிறான் என்றால்... நமது சமூகம் எதை நோக்கி செல்கிறது என்பதை சிந்திக்கவே அச்சமாக உள்ளது.

கேரளா!
கொச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், 17 வயது பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தையான சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்ற நவம்பர்!
12 வயது நிரம்பிய அந்த சிறுவன் சென்ற நவம்பர் மாதம் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

பெண் குழந்தை!
மரபணு பரிசோதனையில், பிறந்த பெண் குழந்தையின் தந்தை அந்த 12 வயது சிறுவன் தான் என தெரியவந்துள்ளது. அந்த பெண் கூறிய பிறகு தான் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் சீர்திருத்த பள்ளி!
சிறுவனின் வயதை கருதி வழக்கு நீதி வாரியத்தின் கீழ் நடக்கவுள்ளது. மேலும், சிறுவன் இப்போது ஜாமீனில் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் இப்படி?
கற்பழிப்பு சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்ற போதிலும், இது போன்ற விசித்திர வழக்குகள் இன்று அதிகமாகி வருகிறது. பதின் வயதை கூட எட்டிடாத ஒரு சிறுவன் கற்பழித்தது மட்டுமின்றி, 12 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆகியுள்ளான் என்பது பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் என்ன?
இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? கற்பழிப்பு வழக்குகளில் சிக்குபவர்களுக்கு என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகிறது என்ற அச்சமின்மையா? ஊடகங்கள், சினிமாக்கள் கற்பழிப்பு என்பதை அதிகம் கவனம் செலுத்தி வெளிச்சமிட்டு காட்டும் பிம்பமா?

பெற்றோரும், சமூகமும்!
இந்த வயதில் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த செயல்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கற்பிக்க பெற்றோருக்கு நேரமில்லை. தாத்தா, பாட்டி உறவும் இல்லை.
தன் குழந்தையையே சரியாக வளர்க்க நேரம் இல்லாமல் வாழும் இவர்கள், சமூகத்தில் வளரும் குழந்தையின் நலன் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவார்களா என்ன?

முந்தைய தலைமுறை!
முந்தைய தலைமுறையில், நாலு தெரு தள்ளி குடியிருக்கும் குழந்தைகள் கூட, யாருடைய பிள்ளை, அவரது குடும்பம் என்ன என்ற விவரம் தெரியும். எனவே, அவனை வேறு இடத்தில் கண்டால் கூட அதட்டி வீட்டுக்கு அனுப்புவர். ஆனால், இன்றோ, பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.
இப்படிப்பட்ட சமூக மாற்றமும், பெற்றோர் வளர்ப்பு தவறுகளும் தான் இது போன்ற தவறுகள் சமூகத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.



Click it and Unblock the Notifications











