Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆனான் - கற்பழிப்பு வழக்கில் பரபரப்பு!
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆன சம்பவம், கேரளாவில் பரபரப்பு!
காலையில் எழுந்ததும் டிவியில், நாளிதழில் ஏதோ இராசிபலன் பார்ப்பது போல தினந்தோறும் கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் செய்திகளில் வந்தவண்ணமே உள்ளன.
பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டுமல்ல, பாதிப்பை உண்டாக்கும் ஆண்கள் மத்தியிலும் கூட வயது வரம்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று வயது குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர்.
இச்சை என்றால் என்ன என்று தெரியாத, பதின் வயதை கூட எட்டாத ஒரு 12 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்து, அப்பா ஸ்தானம் அடைகிறான் என்றால்... நமது சமூகம் எதை நோக்கி செல்கிறது என்பதை சிந்திக்கவே அச்சமாக உள்ளது.

கேரளா!
கொச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், 17 வயது பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தையான சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்ற நவம்பர்!
12 வயது நிரம்பிய அந்த சிறுவன் சென்ற நவம்பர் மாதம் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

பெண் குழந்தை!
மரபணு பரிசோதனையில், பிறந்த பெண் குழந்தையின் தந்தை அந்த 12 வயது சிறுவன் தான் என தெரியவந்துள்ளது. அந்த பெண் கூறிய பிறகு தான் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் சீர்திருத்த பள்ளி!
சிறுவனின் வயதை கருதி வழக்கு நீதி வாரியத்தின் கீழ் நடக்கவுள்ளது. மேலும், சிறுவன் இப்போது ஜாமீனில் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் இப்படி?
கற்பழிப்பு சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்ற போதிலும், இது போன்ற விசித்திர வழக்குகள் இன்று அதிகமாகி வருகிறது. பதின் வயதை கூட எட்டிடாத ஒரு சிறுவன் கற்பழித்தது மட்டுமின்றி, 12 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆகியுள்ளான் என்பது பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் என்ன?
இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? கற்பழிப்பு வழக்குகளில் சிக்குபவர்களுக்கு என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகிறது என்ற அச்சமின்மையா? ஊடகங்கள், சினிமாக்கள் கற்பழிப்பு என்பதை அதிகம் கவனம் செலுத்தி வெளிச்சமிட்டு காட்டும் பிம்பமா?

பெற்றோரும், சமூகமும்!
இந்த வயதில் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த செயல்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கற்பிக்க பெற்றோருக்கு நேரமில்லை. தாத்தா, பாட்டி உறவும் இல்லை.
தன் குழந்தையையே சரியாக வளர்க்க நேரம் இல்லாமல் வாழும் இவர்கள், சமூகத்தில் வளரும் குழந்தையின் நலன் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவார்களா என்ன?

முந்தைய தலைமுறை!
முந்தைய தலைமுறையில், நாலு தெரு தள்ளி குடியிருக்கும் குழந்தைகள் கூட, யாருடைய பிள்ளை, அவரது குடும்பம் என்ன என்ற விவரம் தெரியும். எனவே, அவனை வேறு இடத்தில் கண்டால் கூட அதட்டி வீட்டுக்கு அனுப்புவர். ஆனால், இன்றோ, பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.
இப்படிப்பட்ட சமூக மாற்றமும், பெற்றோர் வளர்ப்பு தவறுகளும் தான் இது போன்ற தவறுகள் சமூகத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.



Click it and Unblock the Notifications