Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் வாழ்க்கையின் புதிய கட்டமான கர்ப்பமாகும் தருணத்தில் ஆச்சரியமான பல விஷயங்களை உணர்வதோடு, மன அழுத்தத்துடனும் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்குமே கருத்தரிப்பது என்பது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படி கருத்தரிக்கக்கூடிய தருணத்தில், கருத்தரித்து விட்டோமா என்பதை அக்காலத்தில் மருத்துவரிடம் சென்று தான் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
அவசியம் படிக்க வேண்யவை: கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்கள்!!!
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக உள்ளோமா என்பதை கர்ப்ப சோதனைக் கருவியைக் கொண்டு வீட்டிலேயே உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் சிலருக்கு அந்த கர்ப்ப சோதனைக் கருவியை எப்போது பயன்படுத்தினால், சரியான முடிவு தெரியும் என்பது தெரியவில்லை.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகைய பெண்களுக்காக, கர்ப்ப சோதனைக் கருவியை எப்போது பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அந்த அறிகுறிகளைக் கொண்டு கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தினால், நிச்சயம் சரியான முடிவு கிடைக்கும்.

மாதவிடாய் தவறுதல்
கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் முதன்மையானது தான் மாதவிடாய் தவறுவது. அப்படி திடீரென்று மாதவிடாய் சுழற்சியானது தவறினால், கர்ப்ப சோதனைக் கருவியை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

வாந்தி மற்றும் குமட்டல்
காலை வேளையில் அதிகப்படியான சோர்வையோ அல்லது வாந்தி, குமட்டல் போன்றவற்றையோ சந்தித்தால், அதுவும் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மென்மையான மார்பகங்கள்
கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தும் போது சரியான முடிவு தெரிய வேண்டுமானால், மார்பகங்கள் திடீரென்று மிகவும் மென்மையாக இளகி காணப்படும் போது மேற்கொள்ள வேண்டும்.

லேசான இரத்தக்கசிவு மற்றும் பிடிப்புகள்
இந்த முறை சற்று கடினமானதாக இருந்தாலும், ஓவுலேசன் காலம் முடிந்து 6-12 நாட்களுக்குள் இத்தகையவற்றை உணர்ந்தால், அப்போது கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.

உணவின் மீது நாட்டம்
கர்ப்பமாகும் போது ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி ஏற்பட்டால், உடனே தவறாமல் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும்.

ஆரம்பத்தில் வேண்டாம்
முக்கியமாக மாதவிடாய் தவறிய ஆரம்ப கட்டத்திலேயே கர்ப்ப சோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அப்போது சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு குறைவாக இருக்கும். இதனால் தவறான முடிவுகள் தான் தெரியும். எனவே மாதவிடாய் தவறிய 1-2 வாரத்திற்கு பின், கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஏனென்றால் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு அதிகரிக்கும். இதனால் சரியான முடிவு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











